ராகுவைப் பற்றிய முக்கிய செய்திகள்:
ராகுவிற்கு சொந்த வீடு கிடையாது. இருக்கும் வீட்டைச் சொந்த வீடாக்கிக் கொள்வார். வீட்டுக்காரன் ஏமாந்தால் முழுவீடும் அவருக்குச் சொந்தமாகி விடும். கிரயப்பத்திரம் எங்கே என்று அவரிடம் யார்போய்க் கேட்பது? கேட்பவனைத் தொங்கவிட்டு அடிப்பார்.
நட்பு வீடுகள்; மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ஆறும்.
பகை வீடுகள்: மேஷம், கடகம், சிம்மம் & கும்பம் (4 வீடுகள்).
உச்ச வீடு: விருச்சிகம்.
நீச வீடு: ரிஷபம்.
ராகுவின் மகா தசைப் பலன்:
ராகு திசை குரு புத்தி (2 வருடம் 4 மாதங்கள் 24 நாட்கள்)
ராகு திசை புதன் புத்தி (2 வருடம் 6 மாதங்கள் 18 நாட்கள்)
ராகு திசை சுக்கிர புத்தி: (3 வருடங்கள்)
இந்த மூன்று தாசா புத்திகளிலும் அதாவது சுமார் எட்டு வருட காலம் ராகு ஜாதகனுக்கு நன்மைகளைச் செய்வார். மீதி பத்து வருட காலம் (அவருடைய மகா திசை 18 ஆண்டுகள்) நல்லதைத் தவிர மற்றவைகளைச் சுறுசுறுப்புடன் செய்வார். ஜாதகனை துவைத்து அலசிப் பிழிந்து வெய்யிலில் காயப் போட்டு விடுவார்.
ராகு திசை நடந்தாலும், ராகு திசை குரு புத்தி அல்லது சுக்கிர புத்திகளில் ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்கு அவர் திருமணத்தையும் செய்து வைப்பார். அதை நீங்கள் நன்மைக் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.
மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராகு திசை சுமார் 7 முதல் 25 வயதிற்குள் வரும். மேற்கூறிய நட்சத்திரங்களின் பிறப்பு இருப்பில் குறைவான காலம் இருந்தால் (அதுதான் சாமி Birth Dasa Balance) அதற்கு முன் கூட்டியே திசை ஆரம்பித்துவிடும் அந்த மூன்று நட்சத்திரக்காரர்களின் லக்கின அதிபதி, வித்யாகாரகன் நான்காம் வீட்டதிபதி ஆகிய மூவரில் இருவர் வலுவாக இல்லையென்றாலும், அந்தத் திசை ஜாதகனின் படிப்பை முடக்கிவிடும். ஜாதகன் School Drop out அல்லது college Drop out ஆகிவிடுவான்.
ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் ஆகிய மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராகு திசை சுமார் 17 முதல் 35 வயதிற்குள் வரும். மேற்கூறிய நட்சத்திரங்களின் பிறப்பு இருப்பில் குறைவான காலம் இருந்தால் அதற்கு முன் கூட்டியே திசை ஆரம்பித்துவிடும். அதாவது சந்திர திசையில் இருப்பு குறைவாக இருந்தால், 10 வயதில் இருந்து 28 வயது வரை அல்லது 30 வயதுவரை ராகு திசை இருக்கும். இந்த அமைப்பில் பிறந்தவர்களுக்கு, திருமணம் தாமதமாகும், அல்லது திருமண வழ்வில் பிரச்சினைகள் உண்டாகும். அதேபோல் சிலருக்கு சரியான வேலை அல்லது தொழில் அமையாது
வாட்டிவிடும்.
கிருத்திகை, உத்திரம், உத்திராடம் 23 முதல் 41 வயது வரை. அல்லது அதற்கு முன்பு இந்தத் திசை வரும். நடு வயதில் வரும் இந்தத் திசையினால் ஜாதகனின் செல்வம் கரையும் அல்லது ஜாதகன் பொருள் எதையும் சேர்க்க இயலாமல் அவதியுறுவான்.
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி (குருவின் நட்சத்திரங்கள்). பூசம், அனுஷம், உத்திரட்டாதி (சனியின் நட்சத்திரங்கள்). இந்த 6 நட்சத்திரக்காரர்களுக்கும் ராகு திசை அவர்கள் 85 வயதிற்கு மேல் வாழ்ந்தால் வரும். இல்லாவிட்டால் இல்லை. அதற்காக அவர்கள் மகிழ முடியாது. வேறு திசைகளில் இருக்கும் ராகு புத்தி அவர்களை அவ்வப்போது நன்றாகக் கவனித்துவிடும். பொதுவாக ராகு திசையால் பெரிய நன்மைகள் ஏற்படாது. இதுவாவது கிடைத்ததே என்று சந்தோஷப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான் உண்மை நிலை!
ராகுவிற்கு சொந்த வீடு கிடையாது. இருக்கும் வீட்டைச் சொந்த வீடாக்கிக் கொள்வார். வீட்டுக்காரன் ஏமாந்தால் முழுவீடும் அவருக்குச் சொந்தமாகி விடும். கிரயப்பத்திரம் எங்கே என்று அவரிடம் யார்போய்க் கேட்பது? கேட்பவனைத் தொங்கவிட்டு அடிப்பார்.
நட்பு வீடுகள்; மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ஆறும்.
பகை வீடுகள்: மேஷம், கடகம், சிம்மம் & கும்பம் (4 வீடுகள்).
உச்ச வீடு: விருச்சிகம்.
நீச வீடு: ரிஷபம்.
ராகுவின் மகா தசைப் பலன்:
ராகு திசை குரு புத்தி (2 வருடம் 4 மாதங்கள் 24 நாட்கள்)
ராகு திசை புதன் புத்தி (2 வருடம் 6 மாதங்கள் 18 நாட்கள்)
ராகு திசை சுக்கிர புத்தி: (3 வருடங்கள்)
இந்த மூன்று தாசா புத்திகளிலும் அதாவது சுமார் எட்டு வருட காலம் ராகு ஜாதகனுக்கு நன்மைகளைச் செய்வார். மீதி பத்து வருட காலம் (அவருடைய மகா திசை 18 ஆண்டுகள்) நல்லதைத் தவிர மற்றவைகளைச் சுறுசுறுப்புடன் செய்வார். ஜாதகனை துவைத்து அலசிப் பிழிந்து வெய்யிலில் காயப் போட்டு விடுவார்.
ராகு திசை நடந்தாலும், ராகு திசை குரு புத்தி அல்லது சுக்கிர புத்திகளில் ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்கு அவர் திருமணத்தையும் செய்து வைப்பார். அதை நீங்கள் நன்மைக் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.
மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராகு திசை சுமார் 7 முதல் 25 வயதிற்குள் வரும். மேற்கூறிய நட்சத்திரங்களின் பிறப்பு இருப்பில் குறைவான காலம் இருந்தால் (அதுதான் சாமி Birth Dasa Balance) அதற்கு முன் கூட்டியே திசை ஆரம்பித்துவிடும் அந்த மூன்று நட்சத்திரக்காரர்களின் லக்கின அதிபதி, வித்யாகாரகன் நான்காம் வீட்டதிபதி ஆகிய மூவரில் இருவர் வலுவாக இல்லையென்றாலும், அந்தத் திசை ஜாதகனின் படிப்பை முடக்கிவிடும். ஜாதகன் School Drop out அல்லது college Drop out ஆகிவிடுவான்.
ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் ஆகிய மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராகு திசை சுமார் 17 முதல் 35 வயதிற்குள் வரும். மேற்கூறிய நட்சத்திரங்களின் பிறப்பு இருப்பில் குறைவான காலம் இருந்தால் அதற்கு முன் கூட்டியே திசை ஆரம்பித்துவிடும். அதாவது சந்திர திசையில் இருப்பு குறைவாக இருந்தால், 10 வயதில் இருந்து 28 வயது வரை அல்லது 30 வயதுவரை ராகு திசை இருக்கும். இந்த அமைப்பில் பிறந்தவர்களுக்கு, திருமணம் தாமதமாகும், அல்லது திருமண வழ்வில் பிரச்சினைகள் உண்டாகும். அதேபோல் சிலருக்கு சரியான வேலை அல்லது தொழில் அமையாது
வாட்டிவிடும்.
கிருத்திகை, உத்திரம், உத்திராடம் 23 முதல் 41 வயது வரை. அல்லது அதற்கு முன்பு இந்தத் திசை வரும். நடு வயதில் வரும் இந்தத் திசையினால் ஜாதகனின் செல்வம் கரையும் அல்லது ஜாதகன் பொருள் எதையும் சேர்க்க இயலாமல் அவதியுறுவான்.
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி (குருவின் நட்சத்திரங்கள்). பூசம், அனுஷம், உத்திரட்டாதி (சனியின் நட்சத்திரங்கள்). இந்த 6 நட்சத்திரக்காரர்களுக்கும் ராகு திசை அவர்கள் 85 வயதிற்கு மேல் வாழ்ந்தால் வரும். இல்லாவிட்டால் இல்லை. அதற்காக அவர்கள் மகிழ முடியாது. வேறு திசைகளில் இருக்கும் ராகு புத்தி அவர்களை அவ்வப்போது நன்றாகக் கவனித்துவிடும். பொதுவாக ராகு திசையால் பெரிய நன்மைகள் ஏற்படாது. இதுவாவது கிடைத்ததே என்று சந்தோஷப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான் உண்மை நிலை!