Admin•••1
avatar
எழுத்ததிகாரன்
30/7/2012, 8:32 pm
ராகுவைப் பற்றிய முக்கிய செய்திகள்:

ராகுவிற்கு சொந்த வீடு கிடையாது. இருக்கும் வீட்டைச் சொந்த வீடாக்கிக் கொள்வார். வீட்டுக்காரன் ஏமாந்தால் முழுவீடும் அவருக்குச் சொந்தமாகி விடும். கிரயப்பத்திரம் எங்கே என்று அவரிடம் யார்போய்க் கேட்பது? கேட்பவனைத் தொங்கவிட்டு அடிப்பார்.

நட்பு வீடுகள்; மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ஆறும்.
பகை வீடுகள்: மேஷம், கடகம், சிம்மம் & கும்பம் (4 வீடுகள்).
உச்ச வீடு: விருச்சிகம்.
நீச வீடு: ரிஷபம்.

ராகுவின் மகா தசைப் பலன்:

ராகு திசை குரு புத்தி (2 வருடம் 4 மாதங்கள் 24 நாட்கள்)
ராகு திசை புதன் புத்தி (2 வருடம் 6 மாதங்கள் 18 நாட்கள்)
ராகு திசை சுக்கிர புத்தி: (3 வருடங்கள்)

இந்த மூன்று தாசா புத்திகளிலும் அதாவது சுமார் எட்டு வருட காலம் ராகு ஜாதகனுக்கு நன்மைகளைச் செய்வார். மீதி பத்து வருட காலம் (அவருடைய மகா திசை 18 ஆண்டுகள்) நல்லதைத் தவிர மற்றவைகளைச் சுறுசுறுப்புடன் செய்வார். ஜாதகனை துவைத்து அலசிப் பிழிந்து வெய்யிலில் காயப் போட்டு விடுவார்.

ராகு திசை நடந்தாலும், ராகு திசை குரு புத்தி அல்லது சுக்கிர புத்திகளில் ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்கு அவர் திருமணத்தையும் செய்து வைப்பார். அதை நீங்கள் நன்மைக் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.

மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராகு திசை சுமார் 7 முதல் 25 வயதிற்குள் வரும். மேற்கூறிய நட்சத்திரங்களின் பிறப்பு இருப்பில் குறைவான காலம் இருந்தால் (அதுதான் சாமி Birth Dasa Balance) அதற்கு முன் கூட்டியே திசை ஆரம்பித்துவிடும் அந்த மூன்று நட்சத்திரக்காரர்களின் லக்கின அதிபதி, வித்யாகாரகன் நான்காம் வீட்டதிபதி ஆகிய மூவரில் இருவர் வலுவாக இல்லையென்றாலும், அந்தத் திசை ஜாதகனின் படிப்பை முடக்கிவிடும். ஜாதகன் School Drop out அல்லது college Drop out ஆகிவிடுவான்.

ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் ஆகிய மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராகு திசை சுமார் 17 முதல் 35 வயதிற்குள் வரும். மேற்கூறிய நட்சத்திரங்களின் பிறப்பு இருப்பில் குறைவான காலம் இருந்தால் அதற்கு முன் கூட்டியே திசை ஆரம்பித்துவிடும். அதாவது சந்திர திசையில் இருப்பு குறைவாக இருந்தால், 10 வயதில் இருந்து 28 வயது வரை அல்லது 30 வயதுவரை ராகு திசை இருக்கும். இந்த அமைப்பில் பிறந்தவர்களுக்கு, திருமணம் தாமதமாகும், அல்லது திருமண வழ்வில் பிரச்சினைகள் உண்டாகும். அதேபோல் சிலருக்கு சரியான வேலை அல்லது தொழில் அமையாது
வாட்டிவிடும்.

கிருத்திகை, உத்திரம், உத்திராடம் 23 முதல் 41 வயது வரை. அல்லது அதற்கு முன்பு இந்தத் திசை வரும். நடு வயதில் வரும் இந்தத் திசையினால் ஜாதகனின் செல்வம் கரையும் அல்லது ஜாதகன் பொருள் எதையும் சேர்க்க இயலாமல் அவதியுறுவான்.

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி (குருவின் நட்சத்திரங்கள்). பூசம், அனுஷம், உத்திரட்டாதி (சனியின் நட்சத்திரங்கள்). இந்த 6 நட்சத்திரக்காரர்களுக்கும் ராகு திசை அவர்கள் 85 வயதிற்கு மேல் வாழ்ந்தால் வரும். இல்லாவிட்டால் இல்லை. அதற்காக அவர்கள் மகிழ முடியாது. வேறு திசைகளில் இருக்கும் ராகு புத்தி அவர்களை அவ்வப்போது நன்றாகக் கவனித்துவிடும். பொதுவாக ராகு திசையால் பெரிய நன்மைகள் ஏற்படாது. இதுவாவது கிடைத்ததே என்று சந்தோஷப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான் உண்மை நிலை!

Admin•••2
avatar
எழுத்ததிகாரன்
30/7/2012, 8:33 pm
ராகுவின் கோச்சார பலன்கள்:

3-ல் இருக்கும் போது (அந்தப் பதினெட்டு மாதங்களில்) சுகம், காரிய சித்தி
ஏற்படும்.

6-ல் இருக்கும்போது, வெற்றி, உடல் உபாதைகள் நிவர்த்தி, பகை வெல்தல்
போன்ற நற்பலன்கள் ஏற்படும்.

11-ல் தனலாபம், சுகபோகம்.

மற்ற இடங்களில் அவர் வலம் வந்து தங்கும் காலங்களில் நன்மை இருக்காது! நவக்கிரகங்களில் ராகுவும் கேதுவும்தான் அதிகமான தோஷங்களை ஏற்படுத்துவார்கள். ஒரு ஜாதகனுக்குக் களத்திர தோஷம் அல்லது புத்திர தோஷம் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள, ஜாதகத்தில் அவர்கள் குடியிருக்கும் இடத்தைப் பார்த்தால் போதும்.

4ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் தாய்க்குத் தோஷம்.
5ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் புத்திர தோஷம்.
7ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் களத்திர தோஷம்.
8ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் ஆயுளுக்குத் தோஷம்.
9ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் தந்தைக்குத் தோஷம்.

ராகு அல்லது கேது அமர்ந்திருக்கும் வீட்டிற்கு அதிபதியான கிரகம் வலிமையாக
இருந்தால் தோஷம் அடிபட்டுவிடும். வலிமையாக இல்லாவிட்டால் தோஷம் உண்டு.

அதென்ன சார் தோஷம்?

களத்திரம் = திருமணம்
புத்திரம் = குழந்தைப்பேறு

திருமணம் தாமதமாவது அதாவது தள்ளிக்கொண்டே போகிறதென்றால், உரிய காலத்தில் திருமணம் நடைபெறவில்லை என்றால் அதன் பின்னணியில் அவர்கள் இருவரில் ஒருவர் இருப்பார்.

ஒரு பெண் மலர்ந்து வாசத்தை அள்ளித்தரும் காலம் எத்தனை ஆண்டுகள்?

36 ஆண்டுகள்

மலர்வதற்கு முன் அவள் குழந்தையாக இருக்கும் காலம் 13 அல்லது 14 ஆண்டுகள். ஆக மொத்தம் 50 ஆண்டுகள். அதோடு அவளுடைய பருவம் காலாவதியாகிவிடும். (expire ஆகிவிடும்). பருவம் காலாவதியான பெண்ணை recondition செய்து பழைய நிலைக்கு - பார்ப்பவரை மயங்க வைக்கும் நிலைக்குக் கொண்டுவர எந்தக் கொம்பனாலும் முடியாது. போனது போனது தான்.

விஷயம் அதுவல்ல!

ஒரு பெண்ணிற்கு அவள் மலந்து வாசம் வீசுகின்ற காலத்தில், உரிய நேரத்தில் திருமணம் செய்து வைப்பதுதானே நல்லது.

"அழகென்னும் விருந்தொன்று பரிமாறினேன்
பரிமாறும் நேரத்தில் சற்றுப் பசியாறினேன்"

என்று தன்னை மலராகவும், வந்த கணவனை வண்டாகவும் நினைத்து அவளால் பாட முடியும். கணவனுக்குப் பரிமாறினவள் தன் பசியையும் போக்கிக் கொண்டதைச் சொல்லும் அழகைப் பாருங்கள். திருமணம் தள்ளிக் கொண்டே போனால் அது தாமதக் கணக்கில் வரும். ஆகவே ஒரு பெண்ணிற்கு 18 வயதிலிருந்து 26 வயதிற்குள் (14 + 12) திருமணம் நடைபெற வேண்டும்.

அதே போல திருமணமாகி மூன்று வருடங்களுக்குள் தம்பதியர்க்குக் குழந்தை பிறந்து விட வேண்டும். இல்லையென்றால் அதுவும் தாமதக் கணக்கில் வரும். அந்தத் தாமதம் தோஷம் எனப்படும்.

அதீத தோஷமென்றால் என்ன ஆகும்?

அந்த வீட்டுக்குரியவன் நீசமாகி அல்லது களத்திரகாரகன் சுக்கிரன் நீசமாகி, இந்த அமைப்பும் உடன் இருந்து கூட்டாகச் சொதப்புவது அதீத தோஷம் எனப்படும். திருமணமே நடக்காது. திருமணம் நடந்தால் அல்லவா குழந்தையைப் பற்றிய பேச்சு!

தோஷத்திற்கு என்ன பரிகாரம்?

பிரார்த்தனை ஒன்றுதான் பரிகாரம். ராகு, கேதுவிற்குரிய தலங்களுக்குச் சென்று வழிபடுவது சாலச் சிறந்தது. காசை வைத்துப் பரிகாரம் என்பதெல்லாம் ஏமாற்று வேலை!

Admin•••3
avatar
எழுத்ததிகாரன்
30/7/2012, 8:33 pm
கிரகங்களுடன் இராகு, கேது சேர பலன்கள்

* மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மீனம் ஆகிய இடங்களில் கரும்பாம்பு எனப்படும் ராகு நின்றிட அதே சமயத்தில் மிதுனம், கன்னி, தனுசு, மீனம் போன்ற நான்கு மூலைகளிலும் கிரகங்கள் இருந்தால் அந்த ஜாதகனுக்கு சிறந்த நன்மைகளும் பொன் பொருள் சேர்ந்து யோகம் அமையும்.

* செம்பாம்பு எனப்படும் கேது 1,5,9 ஆகிய கோண ஸ்தானங்களிலும் லாப ஸ்தானத்திலும் நிற்க அந்த ஜாதகன் சொந்த இடத்திலும் பிற தேசங்களிலும் வாசம் செய்து சம்பாதிப்பான். பொன் ஆபரணம் மற்றும் பூமியும் சேர்ந்து இந்திரனுக்கு ஒப்பாக வாழ்வான். இல்லறத்தில் மகிழ்ச்சி அடைவான். ஜோதிடத்திலும் வல்லமை பெற்று விளங்குவான்.

* லக்னாதிபதியும் சந்திரனும் மூன்றாம் அதிபதியும் சனியும் ஒரே இடத்தில் கூட ராகுவுடன் பாவக்கிரகம் சேர இவர்களில் தசா புக்தி காலத்தில் ஜாதகனுக்கு உயிர் ஆபத்து உண்டாகும். தற்கொலை போன்ற எண்ணமும் வரும்.

* ராகுவுடன் வேறு கிரகம் சேர்ந்து அவர்களுக்கு இரு புறமும் மற்ற கிரகங்கள் நிற்க அந்த ஜாதகன் மிகப் பெரிய வீரனாகத் திகழ்வான். யானை, குதிரைகள் பெற்று வீரத்துடன் சண்டையிட்டு வெற்றி அடைவான்.

* ராகு, கேதுக்கள் 6,8,12ல் நிற்க அந்த ஜாதகனுக்கு நோய் உண்டாகும். மனைவியால் பிரச்சினைகள் ஏற்படும். இவர்கள் தாசா புக்தியில் பலவித துன்பங்களைக் கொடுப்பார்கள்.

* பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் இடத்தில் ராகு நிற்க அந்த ஜாதகனுக்கு புத்திர தோஷம் ஏற்படும். இந்த தோஷம் நீங்க பரிகாரம் என்னவென்றால் ஜாதகனின் மனைவி அரச மரத்தை சுற்றி வந்து கன்னியர்களுக்கு ஸ்நானம் செய்வித்து அவர்களை வணங்க புத்திர உற்பத்தி உண்டு. மேலும் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று ராகு பிரதிஷ்டையும் செய்யலாம்.

* ராகு கேந்திரம் மற்றும் திரிகோண ஸ்தானங்களில் தோன்ற அந்த வீட்டிற்குடையோன் சுபருடன் கூடினாலோ அல்லது சுபர் பார்வை பெற்றாலோ அந்த ஜாதகனுக்கு சிறப்பான யோக பலன்கள் உண்டாகும். ராகுவுடன் லக்னாதிபதியும் சேர மேலும் யோக விருத்தி ஏற்படும்.

* 5ம் இடத்திற்குரியோன் பாவனாக ராகு, கேதுக்களுடன் கூடி 3ல் நிற்க அந்த ஜாதகனின் மனைவியால் தொந்தரவு ஏற்படும். கணவனுடன் எப்போதும் சண்டை போடுவாள். கொடிய குணம் கொண்டவளாயிருப்பாள்.

* லக்னத்திற்கு 3க்குடையோன் பாவனாகி ராகு, கேதுக்களுடன் கூட மனைவி கணவனை மதியாமல் அவன் சொல்வதை கேட்கமாட்டாள். மனைவி கணவனை விட வயது அதிகம் இருப்பாள். இவர்கள் இருக்கும் ஊருக்கு அருகில் கடல் உண்டு.

* ராகு 5ல் நின்று அவனை சூரியன் பார்த்தால் அந்த ஜாதகன் வெளிநாட்டில் சென்று வேலை செய்வான். பொன், பொருள், நிலம் இவை சேரும். எனினும் இவன் தந்தைக்கு உபகாரமாக இருக்கமாட்டான்.

* பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் இடத்தில் ராகு நிற்க அந்த ஜாதகனுக்கு புத்திர தோஷம் ஏற்படும். இந்த தோஷம் நீங்க பரிகாரம் என்னவென்றால் ஜாதகனின் மனைவி அரச மரத்தை சுற்றி வந்து கன்னியர்களுக்கு ஸ்நானம் செய்வித்து அவர்களை வணங்க புத்திர உற்பத்தி உண்டு. மேலும் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று ராகு பிரதிஷ்டையும் செய்யலாம்.

* ராகு கேந்திரம் மற்றும் திரிகோண ஸ்தானங்களில் தோன்ற அந்த வீட்டிற்குடையோன் சுபருடன் கூடினாலோ அல்லது சுபர் பார்வை பெற்றாலோ அந்த ஜாதகனுக்கு சிறப்பான யோக பலன்கள் உண்டாகும். ராகுவுடன் லக்னாதிபதியும் சேர மேலும் யோக விருத்தி ஏற்படும்.

* 5ம் இடத்திற்குரியோன் பாவனாக ராகு, கேதுக்களுடன் கூடி 3ல் நிற்க அந்த ஜாதகனின் மனைவியால் தொந்தரவு ஏற்படும். கணவனுடன் எப்போதும் சண்டை போடுவாள். கொடிய குணம் கொண்டவளாயிருப்பாள்.

* லக்னத்திற்கு 3க்குடையோன் பாவனாகி ராகு, கேதுக்களுடன் கூட மனைவி கணவனை மதியாமல் அவன் சொல்வதை கேட்கமாட்டாள். மனைவி கணவனை விட வயது அதிகம் இருப்பாள். இவர்கள் இருக்கும் ஊருக்கு அருகில் கடல் உண்டு.

* ராகு 5ல் நின்று அவனை சூரியன் பார்த்தால் அந்த ஜாதகன் வெளிநாட்டில் சென்று வேலை செய்வான். பொன், பொருள், நிலம் இவை சேரும். எனினும் இவன் தந்தைக்கு உபகாரமாக இருக்கமாட்டான்.

Admin•••4
avatar
எழுத்ததிகாரன்
30/7/2012, 8:34 pm
ராகு யாருடன் சேர்ந்தாலும், சேர்த்துக் கொள்கிறவன் வலிமையாக இருந்தால் மட்டுமே அழகு. சேர்த்துக் கொள்கிறவன் லக்கினாதிபதியாகவோ அல்லது லக்கினத்திற்கு யோககாரகனாகவோ அல்லது லக்கினத்தில் இருந்து கேந்திரம் அல்லது திரிகோணங்களில் அமர்ந்திருந்தாலோ அல்லது உச்சமாக இருந்தாலோ அல்லது சுயவர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருந்தாலோ மட்டுமே அவன் வலிமையுடையவனாகக் கருதப்படுவான். அப்போது மட்டுமே அவன் ராகுவோடு சேர்ந்திருக்கலாம். இல்லை என்றால் ராகு படுத்தி எடுத்துவிடுவான். முறையில்லாத காதலில் ஒரு பஜாரியைக் காதலித்த கதைபோல் ஆகிவிடும்.

ராகுவிற்கு சொந்த வீடு கிடையாது. ஆகவே தான் நுழையும் வீட்டில் ஜம்'மென்று இருந்து விடுவான். அதைத் தன் சொந்த வீடாக ஆக்கிக்கொள்ள முயற்சிப்பான். உள்ளே அனுமதித்த அந்த வீட்டின் அதிபதி வலியவன் என்றால் வீடு தப்பிக்கும். இல்லை என்றால் இல்லை.

உதாரணத்திற்கு நான்காம் வீட்டை எடுத்துக் கொள்வோம். நான்காம் வீட்டிற்கு மூன்று இலாக்காக்கள் உண்டு.

1. தாய் ஸ்தானம் அது (ஜாதகனின் தாய் ஸ்தானம் சுவாமி! சொல்லிக் கொடுத்திருக் கிறேன். மறக்கவில்லை அல்லவா?)

2. கல்வி ஸ்தானம்

3. சுக ஸ்தானம் (வீடு, வண்டி, வாகனம் போன்ற இகலோக வஸ்த்துக்களுடன் சுகமாக இருப்பது. அதற்கான இடம்). சரி, இந்த வீட்டில் ராகு இருந்தால் என்ன ஆகும்?

தனுசு லக்கின ஜாதகன். 4ஆம் வீடு மீனம். இரண்டுமே குருவின் சொந்தவீடுகள் 4ல் ராகு இருக்கிறார். அதாவது மீனத்தில் ராகு இருக்கிறார். என்ன பலன்? முதலில் மீனத்தை அவர் கைப்பற்றிகொண்டு விடுவார் (ஆமாம்,ஆக்கிரமிப்புதான்) அந்த வீட்டை அவர் ராஜாங்கம் செய்ய ஆரம்பித்துவிடுவார். சர்வ அதிகாரமும் அவர் கையில். ஹிட்லரின் கையில் கிடைத்த ஜெர்மனி போல் ஆகிவிடும் அந்த வீடு. தாய், கல்வி சுகம் என்று எல்லாவற்றிலும் பிரச்சினைகள் உருவாகும். இது எல்லோருக்கும் இல்லை!

குருபகவான் ஜாதகனின் ஜாதகத்தில் வலிமையாக இருந்தால் அது நடக்காது. சந்திரன் வலிமையாக இருந்தால் ஜாதகனின் தாய்க்கு ஒன்றும் நேராது. வித்யாகாரகன் புதன் நன்றாக இருந்தால் கல்வியில் தடங்கல் ஏற்படாது அல்லது படிப்பு பாதியில் நின்று போகாது. சுக்கிரன் நன்றாக இருந்தால் ஜாதகனின் சுகங்களுக்குக் கேடு வராது. அதுதான் பலன். இல்லையென்றால் சொல்லப்படுள்ள நால்வரில் யார் யார் வீக்'காக இருக்கிறார்களோ, அவர்களுக்குத் தகுந்த மாதிரிப் பலன்கள் மாறும். நான்கு பேருமே வீக்'காக உள்ளார்களா? ஜாதகத்தை மூடி வைத்துவிடலாம். ஒரே வரியில் சொல்லிவிடலாம். ஜாதகன் கஷ்டப்படவே பிறந்தவன்.

இங்கே எழுதப்பெற்றுள்ள அனைத்துமே பொதுப்பலன்கள். தனிப்பட்டவர்களுக்கு அவர்களுடைய ஜாதகத்தில் உள்ள மற்ற அமைப்புக்களினால் இவைகள் கூடலாம் அல்லது குறையலாம். அல்லது இல்லாமலும் போகலாம். அதைக் கவனத்தில் கொள்ளவும்!

Admin•••5
avatar
எழுத்ததிகாரன்
30/7/2012, 8:35 pm
ராகுவைப் பற்றிய பாடம்

பன்னிரெண்டு வீடுகளிலும் ராகு அமர்ந்திருப்பதற்கான பலன்கள். இவை எல்லாமே பொதுப் பலன்கள். அதை மனதில் கொள்க!

1 லக்கினத்தில் ராகு: ஜாதகன் சோம்பல் உடையவன். அடிக்கடி நோய்வாய்ப் படக்கூடியவன். அது தலைவலியாகவும் இருக்கலாம், காய்ச்சலாகவும் இருக்கலாம். அல்லது வயிற்றுக் கோளாறுகளாகவும் இருக்கலாம். நோயின் தன்மைகளும், வந்து தாக்கும் நேரமும், காலமும் ஜாதகத்தின் பிற அமைப்புக்களை வைத்து மாறுபடும். ஜாதகனுக்குப் (பொதுவாக) இரக்க குணமே இருக்காது. ஜாதகனுக்கு தர்மசிந்தனை, மகிழ்ச்சி மற்றும் வயதான காலத்தில் தன் குழந்தை களால் மகிழ்ச்சி போன்றவை இருக்காது. சிலருக்கு சொத்து சுகம் இருக்காது. சிலருக்கு நீண்ட ஆயுள் இருக்காது. ஜாதகத்தில் எட்டாம் வீடும், ஆயுள்காரகனும் வலுவாக இல்லையென்றால், அவர்களுடன் ராகுவும் சேர்ந்து ஜாதகனைப் பரலோகத்திற்கு அனுப்பிவிடுவான். அல்லது வைகுண்டத்திற்கு அனுப்பிவிடுவான். சிவபக்தர்களை சிவலோகத்திற்கு அனுப்பிவிடுவான். எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள். போட்டது போட்டபடி ஒருநாள் போய்ச் சேரவேண்டும்.

ஐடென்ட்டி கார்டு, ரேசன் கார்டு, வங்கி இருப்பு, தங்க நகைகள்,சொத்துப் பத்திரங்கள், பங்குப் பத்திரங்கள், இரண்டு கிரவுண்டில் கட்டிய வீடு அல்லது அண்ணாசாலையில் வாங்கிய அடுக்குக் குடியிருப்பு, வண்டி, வாகனங்கள் என்று எதுவும் உடன் வராது. அவைகளெல்லாம் மனைவியின் கையில் தங்கி விடும். அல்லது சிலருக்கு விசுவாசமில்லாத பிள்ளைகள் கையில் அவைகள் தங்கி விடும். பிள்ளைகள் வருடம் ஒருமுறை அவன் இறந்த நாளான்று பன்னீர்ப்பூ மாலை ஒன்றை வாங்கி, அவனுடைய படத்திற்குப் போட்டு, அன்று மட்டும் அவனை நினைத்து மகிழ்வார்கள்.

சிலர் வீட்டில் அதுவும் நடக்காது. மேற்கொண்டு. It is total nonsense! என்று திட்டு வேறு கிடைக்கும்.(அதாவது அப்பனுக்குத் திதி செய்வது) அதுதான் வாழ்க்கை. அதை உயிருடன் இருக்கும்போதே உணரும்படியான சூழ்நிலைகளை, ராகு ஏற்படுத்துவான். கேது அதை அடையாளம் காட்டுவான். சிலர் அதை உணர்வார்கள். பலர் அதை உணரமாட்டார்கள். மேலும் மேலும் சம்பாதிப்பதில் மும்மரமாக இருப்பார்கள். சிலர் தலை எழுத்து அப்படி இருக்கும். அவன் சம்பாதித்து வைத்து விட்டுப்போவான். அவனுக்கு அனுபவ பாத்தியம் இருக்காது. இந்த அமைப்பு ஜாதகன் பெண்பித்து உள்ளவனாக இருப்பான். பித்து என்றால் அடிக்க வருவீர்கள். ஆகவே இப்படி வைத்துக் கொள்ளுங்கள. பெண் மேல் தீராத மோகம் உடையவனாக இருப்பான். ஜாதகியாக இருந்தால் அவளுக்கும் அந்த மோகம் இருக்கும். ஆனால் பெண்ணிற்கென்று சில விசேஷ உடல் அமைப்பும் குணங்களும் உண்டு. அதனால் அதை அவள் அடக்கி வைத்திருப்பாள்.

அது என்ன சார்? பெண்ணிற்கென்று சில விசேஷ உடல் அமைப்பும் குணங்களும்
உண்டா? ஆமாம் அது பெரிய பாடம். பின்னால் வரும்!

மேஷம், ரிஷபம், கடகம் ஆகிய ராசிகள் லக்கினமாக இருந்து அதில் ராகு இருந்தால் மேற்கூறியவற்றில் தீய பலன்கள் எதுவும் ஜாதகனுக்கு இருக்காது. காரணம் ராகுவிற்கு அவைகள் உகந்த லக்கினங்கள்!

Admin•••6
avatar
எழுத்ததிகாரன்
30/7/2012, 8:38 pm
2. ராகு 2ஆம் வீட்டில் இருந்தால்:

ஜாதகனுக்குக் குறைந்த அளவே செல்வம் இருக்கும். சிலர் கடனில் மூழ்க நேரிடும் ஜாதகன் சாதுரியம் உள்ளவன் சாமர்த்தியம் உள்ளவன். அந்த சாதுரியங்களில் சிலாருக்கு தந்திரமும் ஒளிந்திருக்கும். அடுத்தவன் கண்ணில் படாது. சட்டென்று கோபம் வரக்கூடியவன். பொதுவாகவே இரண்டில் தீய கிரகங்கள் இருந்தால் சொத்து இருக்காது. அல்லது சேராது. அப்படியே இருந்தாலும் பல காரணங்களால் கரைந்துவிடும். இங்கே இருக்கும் ராகு நிச்சயமாகக் கரைப்பான். அல்லது சொத்தைச் சேர்க்க விடமாட்டான். அதிலிருந்து தப்பிக்க ஒரு உபாயம் இருக்கிறது. திருமணமாகாத நிலையில் காசு வந்தால் அம்மா கையில் கொடுத்துப்போடு செல்லக்கண்ணு! மணமாகி இருந்தால் மனைவி கையில் கொடுத்துவிடு. அதுதான் வழி!

3. ராகு 3ஆம் வீட்டில் இருந்தால்:

ஜாதகன் மற்றவர்களைக் கவரக்கூடியவன். யாராக இருந்தாலும் சாய்த்து விடுவான். பெண்களாக இருந்தால் எளிதில் சாய்த்து விடுவான். தன்னை பற்றி உயர்வாக நினைத்துக் கொண்டிருப்பான். தாராள மனமுடையவன். ஊதாரி. கையில் காசு வைத்துக் கொள்ள மாட்டான் உறவுகள், நண்பர்கள், கேளிக்கைகள் என்று பணத்தை வைத்துத் தூள் கிளப்பி விடுவான்.

பெண்ணாக இருந்தால், நகை நட்டு, புடவை, அலங்காரச்சாதனங்கள் என்று அவளும் தூள் கிளப்பி விடுவாள். இந்த அமைப்பினருக்கு நீண்ட ஆயுள் உண்டு. அதோடு குபேரயோகம் போல பணம் வரும். சொத்துக்களும் வந்து சேரும்! 3ஆம் வீடு, 6ஆம் வீடு, 10ஆம் வீடு, 11ஆம் வீடு ஆகிய இடங்கள் தீய கிரகங்களுக்கு உகந்த இடங்கள் அதை மனதில் கொள்க!

4. ராகு 4ஆம் வீட்டில் இருந்தால்:

மருத்துவ ஜோதிடத்தின்படி, இது இருதயத்திற்கான இடம். இங்கே ராகு இருப்பது நல்லதல்ல. இருதய சம்பந்தப் பட்ட நோய்கள் வரும். இருதயம் சம்பந்தப் பட்ட நோய்கள் என்னனென்ன வென்று நமது மதிப்பிற்குரியவரும் சக பதிவருமான டாக்டர் ப்ரூனோ அவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இந்த இடம் சொத்து, சுகங்களுக்கான இடம். இங்கே அமரும் ராகு அவை இரண்டையும் இல்லாமல் செய்துவிடுவான். மகிழ்ச்சி இருக்காது. சொத்துக்கள் இருக்காது. இருந்தாலும் நிலைக்காது. வண்டி வாகனங்கள் இருக்காது. பல ஜாதகர்களை இந்த அமைப்பு பொடி நடையாக வாழ்க்கை முழுவதும் நடக்க வைத்துவிடும்.

உறவினர்களிடம் ஒட்டுதல் இருக்காது. அவர்களில் பலர் விரோதிகளாகி விடுவார்கள். சிலருக்கு தன் தாயின் மீதே பிடிப்பு இருக்காது! இருக்கும் பன்னிரெண்டு இடங்களில் ராகு இங்கே அமர்வதுதான் மோசமாகப் போவிடும். சோகமாகப் போய்விடும். வாழ்க்கை முழுவதும் அவதியாகிவிடும். என் உறவினர்களின் ஜாதகங்களில் சிலருடைய ஜாதகம் இந்த அமைப்பில் இருப்பதையும், அவர்கள் மீள முடியாத சுகக்கேடுகளில் இருப்பதையும் நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

எனக்குத் தெரிந்த பெண் திருமணமாகி, ஒரு செல்வந்தர் வீட்டிற்கு மருமகளாகப் போனார். ராகுவும் கூடவே போனான். அவர்கள் வீட்டில் அவநம்பிக்கை காரணமாக எந்த வேலைக்கும் ஆட்களை நியமிக்கும் வழக்கமில்லை. போன இந்தப் பெண்மணிதான் கடைசிவரை சம்பளம் இல்லாத வேலைக்காரியாக அவர்கள் வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்தார். இப்போது வேலை ஒப்பந்தம் முடிந்து விட்டது. நிம்மதியாக இருக்கிறார். ஆமாம் அவர் இறைவனடி சேர்ந்துவிட்டார்.

5. ராகு 5ஆம் வீட்டில் இருந்தால்:

ஜாதகன் சுயநலவாதி. தன்னைப் பற்றி மட்டுமே நினைப்பான். வெற்றிக்கு வேண்டிய அதிரடிகள் எல்லாம் இருக்காது. சற்றுக் கோப தாபம் உடையவன். உறவினர்கள் அவனைக் கழற்றிவிட்டு விடுவார்கள். அதாவது உறவினர்கள் இவனைக் கண்டால் ஒதுங்கி விடுவார்கள். சிலருக்கு குழந்தை பிறப்பது தாமதமாகும். சிலருக்கு ஒரு குழந்தை மட்டும் இருக்கும். ஜாதகத்தில் காரகன் குரு நன்றாக இல்லையெனில், இந்த அமைப்பினருக்குக் குழந்தை இருக்காது.

6. ராகு 6ஆம் வீட்டில் இருந்தால்:

ஜாதகனுக்கு வயிற்றுக் கோளாறுகள் இருக்கும். அது அவனைப் படுத்தி எடுக்கும். ஜாதகனுக்கு வளமான வாழ்க்கை அமையும். அதோடு சேர்த்து அல்லது அவனது வளமையைப் பார்த்து, பொறாமைப்படும் எதிரிகளும் இருப்பார்கள். ஜாதகன் தர்ம சிந்தனைகளை உடையவனாக இருப்பான். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் புகழ் உடையவனாக இருப்பான். சாப்பாட்டு ராமனாக இருப்பான் anything under the sun என்று எதையும் ரசித்து சாப்பிடக்கூடியவனாக இருப்பான். அவன் சாப்பிடுவதெல்லாம் மருந்து மாத்திரைகள் இன்றி தானியங்கி இயந்திரம்போல ஜீரணமாகிவிடும். வெற்றிகள் பலவற்றை அடையக்கூடியவனாக இருப்பான்.

அவனுடைய தொழில் ஸ்தானமும், இந்த அமைப்பும் சேர்ந்தால், சிலர் ராணுவத்தில் பணிபுரிவார்கள். அதிகாரியாக இருப்பான். ஆற்றல் நிறைந்தவனாக இருப்பான். பல நண்பர்கள், கூட்டாளிகள் புடைசூழ அரசனைப் போல வாழ்வான். நீண்ட ஆயுளைப் பெற்றவனாக இருப்பான்.

7. ராகு 7ஆம் வீட்டில் இருந்தால்:

ஜாதகன் ஊதாரியாக இருப்பான். பணத்தின் அருமை தெரியாமல் அதிகமாகச் செலவு செய்பவனாக இருப்பான். சிலருக்கு மகிழ்ச்சி இருக்காது. எப்போதும் உழன்று கொண்டிருப்பான். சிலருக்கு தேவையான புத்திசாலித்தனம் இருக்காது. சுதந்திரமாக இருக்க ஆசைப்படுவான் அடிக்கடி நோய்வாய்ப்படுபவனாக இருப்பான், இந்த அமைப்புள்ள சிலருக்கு, மண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. சிலர் அவமானத்திற்கு உள்ளாக நேரிடும். பெண்களால் ஏச்சுக்கு ஆளாக நேரிடும். அதீத நோயால், உடல் சீர்கெடும். சிலருக்குப் அடிக்கடி பயணங்களை மேற்கொள்ளும்படியான வாழ்க்கை அமையும்.

8. ராகு 8ஆம் வீட்டில் இருந்தால்:

ஜாதகன் அடிக்கடி துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். பொய்க் குற்றச்சாட்டுக்களுக்கும் வீண் பழிச்சொல்லிற்கும் ஆளாக நேரிடும். இந்த அமைப்புள்ள சிலருக்கு ஆயுள் குறைவாக இருக்கும்.(எல்லோருக்கும் அல்ல!) சிலருக்கு வம்ச விருத்தி இல்லாமல் இருக்கும் (அர்த்தம் புரிகிறதா?) முன் கர்ம வினை தொடர்கிறது என்று பொருள். சிலருக்கு உறவுகளும் அதிகம் இருக்காது; செல்வமும் இருக்காது. துயரங்கள் மட்டும் அதிகமாக இருக்கும்.

பொதுவாக இந்த அமைப்பினர் வாக்குவாதம், விதண்டாவாதம் செய்யக்கூடியவர்கள்
சமயங்களில் சாதாரணப் பேச்சுக்கூட சண்டையில் முடியும். அநேக சூழ்நிலைகளில் தோல்வியையே தழுவ வேண்டியதாக இருக்கும். வெற்றிச் செல்வி விலகிப் போய்விடுவாள். ஆண்களாக இருந்தால், சிலருக்கு மூல நோய் உண்டாகும் (Piles Complaint) பெண்களாக இருந்தால் மாதவிடாய்ப் பிரச்சினைகள் இருக்கும்.

9. ராகு 9ஆம் வீட்டில் இருந்தால்:

ஜாதகத்தில் மற்ற அமைப்புக்கள் வலுவாக இருந்தால் இந்த இடத்தில் அமரும் ராகு ராஜ யோகத்தைக் கொடுப்பான். இல்லையென்றால் இல்லை. ராஜயோகம் உள்ளவர்களுக்கு, செல்வம், உறவுகள், ஆண் குழந்தைகள் என்று எல்லாம் அசத்தலாக இருக்கும். ஞானம் உள்ளவர்களையும், பெரியோர்களையும் போற்றும் தன்மையுடையவாக ஜாதகன் இருப்பான்.

இந்த இடத்து ராகு ஜாதகனின் தந்தைக்குக் கேடாக இருக்கும். பூர்விகச் சொத்துக்களுக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கும்!

10. ராகு 10ஆம் வீட்டில் இருந்தால்:

ஜாதகன் செய்யும் தொழிலில் அல்லது வேலையில் புகழ் பெறுவான். இயற்கையாகவே தொழில்நுட்ப அறிவு இருக்கும். Blessed with professional skill என்று வைத்துக் கொள்ளுங்கள். சிலர் பாவச் செயல்களைச் செய்வதற்குத் தயங்க மாட்டார்கள். சிலர் வீரதீரச் செயல்களைச் செய்பவர்களாக இருப்பார்கள். மொத்தத்தில் வீரம், தைரியம், பாராக்கிரமம் ஆகியவைகளைக் கொண்டவனாக ஜாதகன் இருப்பான். எல்லா செளகரியங்களையும் (comforts) பெற்றவனாக இருப்பான். அறிவு, அந்தஸ்து ஆகியவற்றால் மேம்பட்ட வாழ்க்கைச் சூழலில் ஜாதகனின் வாழ்க்கை அமைந்து சிறக்கும்!

11. ராகு 11ஆம் வீட்டில் இருந்தால்:

பதினொன்றாம் இடத்தில் ராகு அமையப் பெற்ற ஜாதகன் அதிகம் படித்தவனாகவும், அதிகம் பொருள் ஈட்டுபவானகவும் இருப்பான். நீண்ட ஆயுளை உடையவனாக இருப்பான். நல்ல நண்பர்களையும், நல்ல கூட்டாளிகளையும் கொண்டவனாக இருப்பான். செய்யும் தொழிலில் அல்லது வேலையில், அனைத்து நுட்பங்களையும் தெரிந்தவனாக இருப்பான். அல்லது விரைவில் எதையும் கற்றுக்கொண்டு செயல்படுபவனாக இருப்பான். வலுவானவனாக இருப்பான். வளம் உடைய வாழ்க்கை அவனுக்குக் கிடைக்கும் அல்லது அமையும். அததனை சுகங்களையும், செளகரியங்களையும் அனுபவிப்பவனாக ஜாதகன் இருப்பான்.

12. ராகு 12ஆம் வீட்டில் இருந்தால்:

ஜாதகன் பாவச் செயல்களைச் செய்பவனாக இருப்பான். அதையும் பிறர் அறியாத வண்ணம் செய்வான். உடல் உபாதைகளுக்கு ஆளாவான்.கண்களில் கோளாறுகள் உண்டாகலாம். சிலருக்கு, செல்வமும் ஆண் வாரிசுகளும் இல்லாமல் இருக்கும். அதாவது மறுக்கப் பட்டிருக்கும். ஆசாமி வலுவில்லாதவன். மன, மற்றும் உடல் வலிமை இல்லாதவன். பார்க்கும் வேலை அல்லது தொழில்களில் இருந்து வீழ்ச்சி அடைய நேரிடும். இந்த இடத்து ராகு, மேலும் ஒரு தீய கிரககத்தின் (சனி, அல்லது செவ்வாயின்) சேர்க்கை பெற்றால் வீழ்ச்சி சர்வ நிச்சயமாக உண்டு! அந்த பாதிப்பைத் தாக்குப் பிடிக்க இறைவழிபாடு ஒன்று மட்டுமே உதவும்!

Admin•••7
avatar
எழுத்ததிகாரன்
30/7/2012, 8:41 pm
சூரியனும்+ ராகுவும்

1. லக்கினத்தில் இருந்தால்: The native will be successful in all the ventures he undertakes! ஜாதகன் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவான். லக்கினாதிபதி வலுவாக இல்லையென்றால், ஜாதகன் வம்பு, வழக்கு, கேஸ், கோர்ட் என்று அலைய வேண்டியதிருக்கும்.

2. ஜாதகனுக்கு கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படும். சிலருக்கு வயதான காலத்தில் ஏற்படும்.

3. ஜாதகனின் உடன்பிறப்புக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, அதைச் ஜாதகன் சரி செய்ய வேண்டியதிருக்கும். பணம் கரையும்.

4. அந்த அமைப்பு இங்கே இருந்தால் நல்லதல்ல! ஜாதகனுக்குத் தன் தாய் வழி உறவில் சிக்கல்கள் உண்டாகும். படித்த படிப்பு வீணாக, சம்பந்தம் இல்லாத வேறு தொழிலைச் ஜாதகன் செய்ய நேரிடும

5. ஜாதகனுக்குப் பெண் குழந்தைகள் மட்டுமே இருக்கும். சிலருக்கு மட்டும் ஜாதகத்தில் உள்ள வேறு அமைப்புக்கள் நன்றாக இருந்தால் நாள் கழித்து ஆண் மகவு பிறக்கும்

6. ஜாதகருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படும். சிலருக்குக் கண்டமும் ஏற்படும்.

7. ஜாதகர் இயற்கைக்கு மாறான உடல் உறவுகளில் விருப்பம் உள்ளவராக இருப்பார். சிலர் விவஸ்தையின்றி நெருங்கிய உறவுகளுடன் உடலுறவு கொள்வார்கள். இந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தால் அம்மாதிரி நேர்வது தவிர்க்கப்படும்.

8. ராகு சூரியனுடன் மற்றும் ஒரு தீயகிரகம் இங்கே அமர்ந்தாலோ அல்லது பார்த்தாலோ ஜாதகருக்கு, விஷத்தால் அல்லது விஷக்கடியால் மரணம் ஏற்படலாம். அந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தால் அம்மாதிரி நேர்வது தவிர்க்கப்படும்.

9. ஜாதகர் ஆன்மீகத்தில் ஈடுபடுவார், மேடைகளில் இறைவனைப் பற்றிப் பேசிப் பேசி மிகவும் பிரபலமாகிவிடுவார்

10 ஜாதகர் சட்டங்களுக்கு எதிரான வழிகளில் தொழில் செய்து பொருள் ஈட்டுவார் சமயங்களில் மாட்டிக் கொள்ளவும் செய்வார்

11 ஜாதகர் பொது மக்களை ஏமாற்றும் தொழில் செய்து பிழைப்பார். சிலர் அதே வேலையை அரசியலில் சேர்ந்து செய்வார்கள்

12. ஜாதகர் தன்னுடைய செயல்களுக்காக அல்லது வேலைகளுக்காக அல்லது தொழிலுக்காக ஒருமுறையாவது தண்டிக்கப்படுவார். சிலர் சிறைவாசம் செல்ல நேரிடும்.

ராகுவின் மகா தசைப் பலன்

ராகு திசை குரு புத்தி (2 வருடம் 4 மாதங்கள் 24 நாட்கள்) ராகு திசை புதன் புத்தி (2 வருடம் 6 மாதங்கள் 18 நாட்கள்) ராகு திசை சுக்கிர புத்தி: (3 வருடங்கள்) இந்த மூன்று தசா புத்திகளிலும் அதாவது சுமார் எட்டு வருட காலம் ராகு ஜாதகனுக்கு நன்மைகளைச் செய்வார். மீதி பத்து வருட காலம் (அவருடைய மகா திசை 18 ஆண்டுகள்) நல்லதைத் தவிர மற்றவைகளைச் சுறுசுறுப்புடன் செய்வார் ராகு திசை நடந்தாலும், ராகு திசை குரு புத்தி அல்லது சுக்கிர புத்திகளில் ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்கு அவர் திருமணத்தையும் செய்து வைப்பார்.

மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராகு திசை சுமார் 7 முதல் 25 வயதிற்குள் வரும். மேற்கூறிய நட்சத்திரங்களின் பிறப்பு இருப்பில் குறைவான காலம் இருந்தால் தசா இருப்பு அதற்கு முன் கூட்டியே திசை ஆரம்பித்துவிடும் அந்த மூன்று நட்சத்திரக்காரர்களின் லக்கின அதிபதி, வித்யாகாரகன் நான்காம் வீட்டதிபதி ஆகிய மூவரில் இருவர் வலுவாக இல்லையென்றாலும், அந்தத் திசை ஜாதகனின் படிப்பை முடக்கிவிடும்.

ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் ஆகிய மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராகு திசை சுமார் 17 முதல் 35 வயதிற்குள் வரும். மேற்கூறிய நட்சத்திரங்களின் பிறப்பு இருப்பில் குறைவான காலம் இருந்தால் அதற்கு முன் கூட்டியே திசை ஆரம்பித்துவிடும். அதாவது சந்திர திசையில் இருப்பு குறைவாக இருந்தால், 10 வயதில் இருந்து 28 வயது வரை அல்லது 30 வயதுவரை ராகு திசை இருக்கும். இந்த அமைப்பில் பிறந்தவர்களுக்கு, திருமணம் தாமதமாகும், அல்லது திருமண வழ்வில் பிரச்சினைகள் உண்டாகும் அதேபோல் சிலருக்கு சரியான வேலை அல்லது தொழில் அமையாது. கிருத்திகை, உத்திரம், உத்திராடம் 23 முதல் 41 வயது வரை. அல்லது அதற்கு முன்பு இந்தத் திசை வரும். நடு வயதில் வரும் இந்தத் திசையினால் ஜாதகனின் செல்வம் கரையும் அல்லது ஜாதகன் பொருள் எதையும் சேர்க்க இயலாமல் அவதியுறுவான்.

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி (குருவின் நட்சத்திரங்கள்) பூசம், அனுஷம், உத்திரட்டாதி (சனியின் நட்சத்திரங்கள்) இந்த 6 நட்சத்திரக்காரர்களுக்கும் ராகு திசை அவர்கள் 85 வயதிற்கு மேல் வாழ்ந்தால் வரும். இல்லாவிட்டால் இல்லை. அதற்காக அவர்கள் மகிழ முடியாது. வேறு திசைகளில் இருக்கும் ராகு புத்தி அவர்களை அவ்வப்போது நன்றாகக் கவனித்துவிடும் பொதுவாக ராகு திசையால் பெரிய நன்மைகள் ஏற்படாது.

சந்திர+ராகு

1ல் லக்கினத்தில் இருப்பது நல்லதல்ல! ஜாதகனுக்கு நோய்கள் ஏற்பட்டு, அதனால் ஜாதகனின் மனதும் பாதிக்கப்படும்

2ல் ஜாதகனின் குடும்ப வாழ்க்கையில் தீராத பிரச்சினைகள் உண்டாகும். கணவன் மனைவி இருவருக்குமே மனம் பாதிக்கப்படும். இருவரில் ஒருவர் உயிரை மாய்த்துக் கொள்ளும் மன நிலைமைக்குத் தள்ளப்படுவார்கள்.

3ல் ஜாதகர் சிற்றின்பங்களில் அதிக நாட்டமுடையவராக இருப்பார். சிற்றின்பம் என்னவென்று சரியாகத் தெரியாதவர்கள் பதிவை விட்டு விலகவும். ஜாதகரை 'அந்த' விஷயத்தில் திருப்தி செய்வது மிகக் கடினம். புதிது புதிதாக அவருக்கு வேண்டும். சிலர் 'அந்த' நாட்டத்தில் வீட்டைவிட்டு, வேறு பெண்ணுடன் ஜீட் விட்டு விடுவார்கள். சில பெண்கள், பிற ஆடவர்களுடன் கள்ளக் காதலில் ஈடுபடுவதும் இந்த அமைப்பினால்தான். பல விதிவிலக்கு உண்டு அவையில் மாறுபடலாம்

4ல் ஜாதகரின் அன்னைக்கு தோஷம். அன்னையால் சில ஜாதகர்களுக்குப் பிரச்சினைகள் ஏற்படலாம்.

5ல் ஜாதகருக்கு பலவிதமான சோதனைகள் ஏற்படும். எல்லாம் மனச்சோதனைதான் சிலருக்கு கண்டங்கள் ஏற்படும். நீர் நிலைகளில் விபத்துக்குள்ளாகலாம்

6ல் ஜாதகன் சுகமான பிறவி சுகமாக வாழ்வான். அவனுக்காகப் பிறர் உழைப்பார்கள். சிலருக்கு உடல் உபாதைகள், உடற் குறைபாடுகள் இருக்கும்

7ல் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, சிற்றின்ப ஈடுபாடுகள் மிகுந்தவராக இருப்பார்.

8ல் வாழ்க்கை மகிழ்ச்சியின்றி இருக்கும். என்னடா வாழ்க்கை என்கின்ற மனநிலை இருக்கும். சிலருக்குத் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம் மிகுந்திருக்கும். இந்த அமைப்பு இருந்தால் ஆண்களைவிடப் பெண்களுக்குத்தான் அதிகத் துன்பங்கள் ஏற்படும்

9ல் ஜாதகருக்குப் பிற நாடுகளில் வாழ்க்கை நடத்தும் வாய்ப்புக் கிடைக்கும். அதிர்ஷ்டகரமான அமைப்பு இது. ஜாதகனுக்கு எல்லா நன்மைகளும் ஏற்படும்.)

10ல் இந்த அமைப்புள்ள ஜாதகரின் நடவடிக்கைகள் மோசமானதாக இருக்கும். சூது, வாது, கபடம் நிறைந்ததாக இருக்கும். ஜாதகருடைய வணிகம் அல்லது தொழிலில் அது மேலோங்கியிருக்கும். அவர் மேலுள்ள நம்பகத்தன்மையை அவர் இழக்க நேரிடும்

11ல் ஜாதகருக்குத் திடீர் பண வரவுகள் உண்டு. அது இந்த இரு கிரகங்களின் தசா, புத்திகளில் கிடைக்கும். அந்த அமைப்பிற்கு, சனீஷ்வரனின் பார்வை கூடாது. பார்வை இருந்தால், ஜாதகருக்கு விபத்து ஏற்படும்.

12ல் ஜாதகருக்குப் பல விதத்திலும், மனப் போராட்டம் நிறைந்திருக்கும். மன அமைதியை இழந்து துன்பப்பட நேரிடும்

ராகுவும் +சுக்கிரன்

1ல் லக்கினத்தில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் ஜாதகன் '-----' விஷயத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளவனாக இருப்பான். இதே அமைப்புடைய ஜாதகி கவர்ச்சியாக இருப்பாள். பலரையும்திரும்பிப் பார்க்கவைக்கும் கவர்ச்சியுடன் இருப்பாள். அலங்காரமாக இருப்பாள்.

2ல் இரண்டில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்:இரண்டாம் இடம் குடும்ப ஸ்தானம். ஜாதகனின் குடும்ப வாழ்க்கை சுகமாக இருக்கும். ஜாதகனோ அல்லது ஜாதகியோ யாராக இருந்தாலும் தங்கள் குடும்ப வாழ்க்கையில் சம்போகத்தைப் பிரதானமாக நடத்தி எப்பொதும் மகிழ்வுடன் இருப்பார்கள். பேச்சாற்றல் நிறைந்திருக்கும். திடீர் பணவரவுகள் இருக்கும். இந்த வீட்டில் அந்த இருவராலும் பெரிய பிரச்சினைகள் இருக்காது.

3ல் மூன்றில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்: இளம் வயதிலேயே ஜாதகனுக்குப் பல தீய பழக்கங்கள் ஏற்படும். பீடி, சிகரெட்டில் இருந்து கஞ்சாவரை, ஒன்றையும் ஜாதகன் விட்டு வைத்திருக்க மாட்டான். தெனாவட்டாக இருப்பான். சைட் அடிப்பதில் இருந்து சைடில் ஒதுங்குவதுவரை அத்தனை வேலைகளையும் ஜாதகன் செய்வான். ஆசைப்பட்டதை அடைய வெட்கமின்றி, தன் வயதைவிடக் குறைந்த வயதுடைய பெண்ணின் காலில் விழுவதற்குக்கூட ஜாதகன் தயங்க மாட்டான். ஜாதகன் ஊர் சுற்றி. பெண்ணாக இருந்தால் வீடு தங்க மாட்டாள். அவளுக்குப் பல சிநேகிதங்கள் கிடைக்கும். வாழ்க்கை வாழ்வதற்கே என்பாள். அவளைக் கட்டுப்படுத்துவது கடினம்.

4ல் நான்கில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்: ஜாதகனுக்கு எல்லா வசதிகளும் வந்து சேரும். எல்லா சுகங்களும் கிடைக்கும். அந்த எல்லாம் என்பதில் பெண் சுகமும் அடக்கம்! பெண்ணின் ஜாதகத்தில் இது போன்ற அமைப்பு இருந்தால், எல்லா வசதிகளும் அவளைத் தேடிவரும். கோலமிட்டுக் கொண்டாடி அவள் காலடியில் விழுந்து கிடக்க நல்லதொரு துணைவனும் அவளுக்குக் கிடைப்பான்.

5ல் ஐந்தில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்: உழைக்காமல் கிடைக்கின்ற செல்வம் ஜாதகனைத் தேடிவரும். பல வழிகளிலும் ஜாதகனுக்குப் பணவரவுகள் இருக்கும். சீட்டாட்டம், குதிரை ரேஸ், லாட்டரிச் சீட்டு. பங்கு வணிகம் என்று அவன் எதைத் தொட்டாலும் பணம் கொட்டும்.இந்த அமைப்பினர்கள் காதலிக்கவென்றே பிறந்தவர்கள். பலர் காதலில் சிக்குண்டு கிடப்பார்கள். பெண்ணிடம் சுலபமாகமயங்கி விடுவார்கள். ஜாதகியாக இருந்தால் ஆணிடம் தன்னைச்சுலபமாகப் பறி கொடுத்துவிடுவாள்!

6ல் ஆறில் ராகுவும் சுக்கிரனும் எப்போதும் மாற்று இனத்தினரின் ஸ்பரிசத்திற்காக ஏங்குபவர்கள். ஸ்பரிசத்திற்காக எதையும் செய்யக்கூடியவர்கள். அதேபோல புணர்ச்சிக்கும் இந்த ஜாதகர்களுக்கு எந்த விதிமுறையும் கிடையாது. கால நேரமும் கிடையாது. இரத்த சோகை, இரத்தப் புற்று நோய் போன்ற நோய்கள் உண்டாகும் அபாயமும் உண்டு!

7ல் ஏழில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் எல்லைமீறி நடப்பவர்கள்.வீட்டிற்கு அடங்காதவர்கள்.இந்த அமைப்புள்ள பலருக்குக் காதல் திருமணம் நடைபெறும். வயது வித்தியாசம் பார்க்க மாட்டார்கள்,ஜாதி, மதம், இனம் பார்க்க மாட்டார்கள். எதிர்ப்புக்களையும் மீறி, காதல் மணம் புரிவார்கள். சிலர் சமூகக் கோட்பாடுகளை மதிக்க மாட்டார்கள். தங்கள் வழியே சரி என்று நடப்பார்கள்!

8ல் எட்டில் ராகுவும் சுக்கிரனும் அடிக்கடி விபத்துக்கள் உண்டாகும். விஷக்கடிகள் உண்டாகும். உணவு வகையில் உடல் நலம் பாதிப்புக்குள்ளாகும். சிலரை மாடு முட்டலாம்.சிலருக்கு வாகனங்களால் விபத்து ஏற்படும். பிறப்பு உறுப்பில் நோய் உண்டாகும். ஆடவராக இருந்தாலும் சரி, மகளிராக இருந்தாலும் சரி, பிறப்பு உறுப்பில் நோய் உண்டாகும்.

9ல் ஒன்பதில் ராகுவும் சுக்கிரனும் அதிகமாகப் பயணங்களை மேற்கொள்பவர்கள். வெளிநாடுகளுக்கு அடிக்கடி சென்று வரும் வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலருக்கு வெளி நாடுகளில் தங்கி பொருள் ஈட்டும் யோகமும் கிடைக்கும்.

10ல் பத்தில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் ஜாதகன் இடைத்தரகர் வேலை செய்து பெரும் பொருள் ஈட்டுவான். உயர்ந்த வசதிகளோடு வாழ்க்கை மகிழ்வுடையதாக இருக்கும். வண்டி, வாகனங்கள் விற்பனை அல்லது அவற்றைக் கொண்டு சிலர் தொழில் செய்து மேன்மைஅடைவார்கள். சிலருக்கு மனைவியால் யோகம் உண்டு.

11ல் பதினொன்றில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் ஜாதகன் ரகசிய உறவுகளை உடையவர். ஜாதகனே பல ரகசிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்வான். அதிலேயே திளைப்பார். பிற மதத்துப்பெண்களோடும் உறவுகள் இருக்கும். எல்லையைக் கடந்த, வரம்புகளைக்கடந்த என்று பல வகைகளிலும் ஜாதகர் ரகசிய உறவுகளை ஏற்படுத்திக்கொள்வான்

12ல் பன்னிரெண்டில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் தன் செல்வம், சக்தி, நேரம் செல்வம் ரகசிய வழிகளில் தொலையும். அல்லது அவனே முன் நின்று தொலைப்பான்.

Admin•••8
avatar
எழுத்ததிகாரன்
30/7/2012, 8:43 pm
புதனும் ராகுவும் ஜோடி சேர்ந்திருக்கும்போது கிடைக்கும் பலன்கள்:

1ல் புதனும் ராகுவும்: ஜாதகன் சுறுசுறுப்பானவன். கெட்டிக்காரன். வெட்டிக் கொண்டு வா என்றால் வெட்டி எடுத்து piece போட்டு pack செய்து கட்டிக் கொண்டு வந்து விடுவான். விட்டால் வெட்டியதைக் காசாக்கிக்கொண்டும் வந்துவிடுவான். புதுப்புது விஷயங்களில், செயல்களில் ஆர்வம் உடையவனாக இருப்பான்

2ல் புதனும் ராகுவும்: ஜாதகன் எதையும் முடிக்க முடியாது. விட்டு, விட்டுத் தொடர வேண்டும். உதாரணத்திற்குப் புதிதாக வீடு கட்டுகிறான் என்றால் எட்டு மாதங்களில் முடிக்க வேண்டிய வேலை. நான்கு ஆண்டுகளுக்கு இழுத்தடிக்கும். குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. கணவன் மனைவி இருவரில் ஒருவருக்குத் துரோகம் அல்லது வஞ்சகத்தால் பெரும் துன்பம் ஏற்படும்.

3ல் புதனும் ராகுவும்: தொழில் அல்லது வேலை காரணமாக ஜாதகன் பெட்டி படுக்கையோடு ஊர் ஊராக அலைய நேரிடும். சமயங்களில் அவனும், அவன் குடும்பத்தினரும் ஒரே ஊரில் இருக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். இது அந்த இருவருடைய தசா புத்திகளில் நடக்கும். ஜாதகனுக்குப் பெண்களால் தொல்லை ஏற்படும். பெண்கள் என்ன அவர்களாகவா வந்து இவனைத் தொல்லை செய்யப்போகிறார்கள்? இல்லை. ஜாதகன் பெண்கள் விஷயத்தில் பல தவறுகளைச் செய்வான். செய்துவிட்டு முழிப்பான். விழிகள் பிதுங்கும்!

4ல் புதனும் ராகுவும்: ஜாதகன் உயரிய கல்வியாளனாகத் திகழ்வான். அத்துறையில் பெரும் புகழ் பெறுவான் .தொழில் வீடான பத்தாம் வீடும் நன்றாக இருந்தால், ஜாதகன் வணிகம் செய்து, பெரும்பொருள் ஈட்டுவான். செல்வம் சேரும்.

5ல் புதனும் ராகுவும்: இந்த அமைப்பு நல்லதல்ல. ஜாதகனுக்குக் குழந்தைப்பேறு தாமதமாகும். சிலருக்குக் குழந்தைகள் இல்லாமலும் போகும். ஜாதகன் நுண்ணறிவு உள்ளவனாகத் திகழ்வான்.

6ல் புதனும் ராகுவும்: ஜாதகனுக்கு விநோதமான நோய்கள் உண்டாகும். தோல் நோய்கள், மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்கள் உண்டாகும்.

7ல் புதனும் ராகுவும்: ஜாதகன் அதீதக் காம இச்சை உடையவனாக இருப்பான். காம இச்சை இருக்கலாம். அதீத இச்சைகள் இருந்தால் என்ன ஆகும்? அதற்கு உரிய விலையைக் கொடுத்துத்தான் ஆகவேண்டும். மனைவி வழி உறவுகளுடன் மோதல் உண்டாகும். இந்த அமைப்புள்ள ஜாதகர் கூட்டாக எந்த வேலையைச் செய்தாலும், கடைசியில் அது விவகாரத்தில்தான் முடியும். வம்பு, வழக்கில்தான் முடியும். எச்சரிக்கையாக இருப்பது நல்லது!

8ல் புதனும் ராகுவும்: ஜாதகன் பல துரோகங்களையும், வஞ்சகங்களையும் எதிர்கொள்ள நேரிடும். சிலருக்கு 50 வயதிற்குள் கண்டம் ஏற்படலாம். இறைவழிபாடு அவசியம்!

9ல் புதனும் ராகுவும்: ஜாதகர் சகலகலா வல்லவர். சகல வித்தைகளிலும் நிபுணராக இருப்பார். சமநோக்கு உடையவர். சிலர் ஆன்மீகம் இறைவழிபாடு என்று புது வழியில் இறங்கித் தீவிர பக்திமான் ஆகிவிடுவார்கள்.

10ல் புதனும் ராகுவும்: ஜாதகர் கலைத்திறமை மிக்கவர். பயிலும் கலையில் முதன்மை பெற்றுத் திகழ்வார். திரப்படத்துறையில் இருப்பவர்களுக்கு, இந்த அமைப்பு இருந்தால், சினிமாவின் எந்தப் பிரிவில் இருந்தாலும், அந்தப் பிரிவில் உச்ச நிலைக்குச் சென்று, பணம், புகழ், மதிப்பு என்று அனைத்தையும் பெறுவார்கள்! காதாசிரியர், ஒளிப்பதிவாளர், இயக்குனர் என்று புகழ்பெற இந்த அமைப்பு மிக, மிக அவசியம்.

11ல் புதனும் ராகுவும்: ஜாதகர் சகல கலைகளிலும் சிறந்து விளங்குவார். செல்வந்தராக இருப்பார். அல்லது செல்வந்தர் நிலைக்கு உயர்வார். பலரும் விரும்பும் வண்ணம் அவரது வாழ்க்கை சிறந்து விளங்கும்.

12ல் புதனும் ராகுவும்: ஜாத்கர் வேலைக்கு மட்டுமே செல்ல வேண்டும். சொந்தத் தொழில் செய்தால் தெருவிற்கு வர வேண்டியதாகிவிடும். பல வழிகளிலும் விரையம் ஏற்படும். விரையம் என்றால் என்ன வென்று தெரியும் அல்லவா? Losses! எச்சரிக்கையாக இருத்தல் அவசியம்!

Admin•••9
avatar
எழுத்ததிகாரன்
30/7/2012, 8:46 pm
ராகுவுடன் சனி சேர்ந்து ஒன்றாக இருந்தால் என்ன ஆகும்?

சில விஷயங்களில் துரதிர்ஷ்டம்தான். பொதுவாக நல்லதல்ல. வீட்டில் ஒரு பையன் துஷ்டனாக இருந்தாலே கஷ்டம். இரண்டு பையன்கள் சேர்ந்து துஷ்டத்தனத்தில் ஈடுபட்டால் என்ன செய்வது? கஷ்டமோ கஷ்டம். ஜாதகன் சோதனைமேல் சோதனை என்று பாடும் ஆசாமியாக இருப்பான் என்ன சோதனை என்று பார்ப்போம் வாருங்கள்!

1ல் ராகுவுடன் சனி: இப்படி அமைப்பில் பிறந்த குழந்தை பத்து வயதிற்குள் உயிரைவிடும் அபாயம் உண்டு. லக்கினாதிபதி வலுவாக இருந்தால் தப்பிப்பிழைக்கும். தப்பினாலும், வலிப்பு, இளம்பிள்ளை வாதம் போன்ற நோய்கள் உண்டாகலாம்.

2ல் ராகுவுடன் சனி: தீராத பணக்கஷ்டம், பணத்தைத் தவிர வேறு சிந்தனையில்லாத வாழ்க்கை. நாக்கை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் எதையாவது பேசித் தொலைத்து பெயரைக் கெடுத்துக் கொள்ளும் தன்மை குடும்பத்தில் கலகம். முதலில் பெற்றோர்களுடன். பிறகு வந்தவளுடன். அதாங்க மனைவியுடன்!

3ல் ராகுவுடன் சனி: அதிரடியான ஆள். வாய்ப்புக் கிடைத்தால் சவுக்குக் கட்டை, அறிவாள் என்று கையில் தூக்கும் ஆசாமி. உடன்பிறப்புக்களுடன் வம்பு, வழக்கு, கோர்ட், என்று பாதி வாழ்க்கை, விவகாரங்களில் தீர்ந்துவிடும். நீதிமன்றங்களில் இப்போது நல்ல canteenகள் இருப்பது ஜாதகனுக்கு ஆறுதலான விஷயம்!

4ல் ராகுவுடன் சனி: ஜாதகன் வீட்டை விட்டு வெளியேறிவிடுவான் அல்லது வெளியேற்றப்படுவான் நாடோடியாகத் திரிய வேண்டியதிருக்கும். ஜாதகன் அவனுடைய தந்தையைத்தான் முதல் எதிரியாக நினைப்பான்.

5ல் ராகுவுடன் சனி: ஜாதகனுக்கு அவனுடைய குழந்தைகளால் சல்லிக்காசுகூட பயன் இருக்காது இவனால் அவன் குழந்தைகளுக்கும் பயன் இருக்காது. என்னவொரு கொடுமைடா சாமி! ஜாதகனுக்கு நிலையான மனம், செயல்கள் இருக்காது.

6ல் ராகுவுடன் சனி: ஜாதகன் அடிக்கடி வயிற்றைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விடுவான் பசியால் அல்ல! வலியால்! அவன் தலைமுடியைவிடக் கடன்கள் அதிகமாக இருக்கும்!

7ல் ராகுவுடன் சனி: ஜாதகனுக்கு அரைக் கிழவனான பிறகு திருமணம் நடக்கும். அதாவது நாற்பது வயதிற்கு மேல் திருமணம் நடக்கும். சிலருக்கு கடைசிவரை திருமணம் நடக்காது! பெண்களுக்கு முதிர் கன்னியான பிறகு நடைபெறும்! பெண், ஜென்மம், பாவம் சாமி, எந்த வயதானால் என்ன? எப்படியோ திருமணம் நடைபெற்றால் சரிதான். அவள் கழுத்தில் விழும் முதல் மாலை அவள் இறந்த பிறகு போடப்பட்டதாக இருக்கக் கூடாது பெண் எனப்பட்டவள், ஒரு கண நேரமாவது, ஒரு ஆடவனின் அணைப்பில் சுகப்பட்டுவிட்டுத்தான் இறக்க வேண்டும். இல்லையென்றால் அவள் ஜென்மம் கடைத் தேறாது.

8ல் ராகுவுடன் சனி: பல கண்டங்கள், பல அபாயங்கள், பல விபத்துக்கள் என்று காத்துக் கொண்டிருக்கும். ஜாதகர் தினமும் இறைவழிபாடு செய்வது ஒன்றுதான் அதற்குப் பரிகாரம். இறைவன் கருணைமிக்கவர். அவனைக் காப்பாற்றுவார். தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போகும்!

9ல் ராகுவுடன் சனி: ஜாதகன் தர்மகாரியங்களில் ஈடுபடுவதாகக் காட்டி நிறைய வசூல் செய்வான். பலரையும் ஏமாற்றி வசூல் செய்யும் பணத்தில் சொகுசாக வாழ்வான். கடைசியில் தர்ம அடி வாங்க நேரிடும். தர்மப் பணம் & தர்ம அடி, நல்ல காம்பினேஷன் இல்லையா?

10ல் ராகுவுடன் சனி: ஜாதகன் ஆராய்ச்சியாளனாக உயர்ந்து, பல வழிகளிலும் சிறப்படைவான். சிலர் வண்டி, வாகனங்களை வைத்து ஜீவிக்கும் தொழிலில் ஈடுபடுவார்கள். சிலருக்கு வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகள் கொண்டதாக இருக்கும். ஒரு வருடம் காரில் பறப்பான். அடுத்த வருடமே கஷ்டத்தில் காரை விற்றுவிட்டு சைக்கிளில் பயணிப்பான். அதற்கு அடுத்த வருடம் மோட்டார் சைக்கிளில் செல்வான் மீண்டும் சைக்கிளுக்குத் திரும்புவான். அப்படியே அவனுடைய வாழ்க்கை சைக்கிள் (Life Cycle) இருக்கும்

11ல் ராகுவுடன் சனி: ஜாதகனுக்குத் தலைமை அந்தஸ்து கிடைக்கும், நிறுவனங்கள் என்றால் Team Leader to Chief Executive வரை ஏதாவது ஒன்றில் தலைமைப் பொறுப்பில் இருப்பான். அல்லது அந்த நிலைக்கு உயர்வான். கிராமமாக இருந்தால் நாட்டமையாகவும், நகரமாக இருந்தால் நகராட்சித் தலைவராகவும், அரசியலாக இருந்தால் அறியப்பட்ட கட்சித்தலைவராகவும் ஜாதகன் இருப்பான். உயர்வான நிலையில் இருப்பான், அல்லது அந்த நிலையை எட்டிப் பிடிப்பான். திரைத்துறை என்றால் ஏதாவது ஒரு அமைப்பில் தலவராக இருப்பான். அங்கேதான் நடிகர் சங்கத்தில் துவங்கி, தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குனர்கள் சங்கம் என்று ஏகப்பட்ட அமைப்புக்கள் இருக்கின்றனவே!

12ல் ராகுவுடன் சனி: பெண்ணாக இருந்தால், தன்னை விட மிகவும் வயதில் மூத்தவரைத் திருமணம் செய்துகொள்ள நேரிடும். ஆடவனாக இருந்தால் தன்னைவிட வயதில் மூத்த பெண்ணை மணந்து கொள்வான் அல்லது தன்னைவிட வயதில் மூத்த பெண்ணுடன் தகாத உறவு வைத்திருப்பான் அதைச் சந்தோஷமாகவும் வைத்திருப்பான். ரகசியமாகவும் வைத்திருப்பான்

Admin•••10
avatar
எழுத்ததிகாரன்
30/7/2012, 8:48 pm
ராகுவுடன் செவ்வாய் சேர்ந்து இருக்கும்போது அதற்கு உண்டான பலன்கள்:

Rahu association with Mars leaves the native feeling stress, since he uses the personal will and strength. This native will be engaged in power struggles of all sorts. Arguments, impulsiveness and a hostile nature will be likely.

ராகுவும் செவ்வாய் சேர்ந்திருப்பது பொதுவாக நல்லதல்ல. இருவரும் சேர்ந்து ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும், ஜாதகன் ஒருநாள் அறுவை சிகிச்சைக்கு உட்பட நேரிடும். அது சின்ன அறுவை சிகிச்சையா அல்லது பெரிய அறுவை சிகிச்சையா என்பது ஜாதகத்தில் உள்ள மற்ற கிரகங்களின் அமைப்பைப் பொறுத்துத் தெரியவரும்.

1ல் ராகுவும் செவ்வாயும்: இந்த அமைப்பு ஜாதகரின் லக்கினத்தில் இருந்தால், ஜாதகன் தன் தாய்க்குப் பல அவஸ்தைகளைக் கொடுக்கப் பிறந்தவராவார்.

2ல் ராகுவும் செவ்வாயும்: இந்த சேர்க்கை இரண்டாம் வீட்டில் இருந்தால், ஜாதகனின் பேச்சு பலரையும் புண்படுத்தும் விதமாக இருக்கும். வாயைத் திறந்தால் பொய்யாக இருக்கும். அதோடு கையில் காசு தங்காது. ஊதாரி.

3ல் ராகுவும் செவ்வாயும்: இந்த சேர்க்கை மூன்றாம் வீட்டில் இருந்தால், ஜாதகன் வெற்றியாளன். அடித்துபிடித்துத் தான் செய்யும் செயல்களில் வெற்றியைப் பெற்று விடுவான். உடன்பிறப்புக்களுடன், அதாவது சகோதரர்கள், சகோதரிகளுடன் நல்லுறவு இருக்காது. வம்பு, வழக்குகளாகவே இருக்கும். ஏண்டா தனியாளாகப் பிறக்கவில்லை என்று ஏங்க வேண்டிய அளவிற்குத் தொல்லைகள் இருக்கும்.

4ல் ராகுவும் செவ்வாயும்: இந்த சேர்க்கை நான்காம் வீட்டில் இருந்தால், சுகக் கேடு. ஜாதகன் ஒழுக்கமில்லாமல் பலபெண்களுடன் நெருக்கமாக இருப்பான். எந்த விதத்தில் நெருக்கம் என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள். இதே அமைப்பில் ஜாதகம் உள்ள பெண்ணும் கேள்விக்குறியவளாகவே இருப்பாள். அப்படி அமைப்புள்ள பெண்ணின் ஜாதகத்தைப் பார்க்க நேர்ந்தால், உடனே அவள் நடத்தையைப் பற்றிச் சந்தேகிக்க வேண்டாம்! பெண்களுக்கென்று ஜாதகத்தில் சில சிறப்பு அமைப்புக்கள் உள்ளன. அதாவது பெண்ணின் உடலில் எத்தனை வளைவுகள், நெளிவுகள், சுழிவுகள் உள்ளனவோ அப்படி அவளுடைய ஜாதகத்திலும் பல வளைவுகள், நெளிவுகள் உள்ளன. அதனால் சில ஜாதகிகள் அதற்கு விதி விலக்காகவும் இருப்பார்கள். சிலர் நடத்தைகெட்டவர்களாகவும் இருப்பார்கள். இரண்டிற்குமே வாய்ப்பு உண்டு. இந்த அமைப்பு ஜாதகனின் தாய்க்கு நல்லதல்ல!

5ல் ராகுவும் செவ்வாயும்: இந்த சேர்க்கை ஐந்தாம் வீட்டில் இருந்தால் ஜாதகனின் புத்தி மழுங்கிவிடும் Smartness இருக்காது. எப்போதும் ஆசாமி Dull ஆக இருப்பான். சிறுவயதிலேயே மனம் கெட்டுவிடும். கெட்டுவிடும் என்றால் என்ன பல தீய செயல்களுக்கு உட்படுத்தப்பட்டு அல்லது பல தீய செயல்களைச் செய்து கெட்டுப்போயிருப்பான். சிலருக்கு மனநோய் உண்டாகும். ஆறாம் வீட்டுக்காரன் இறங்கி வந்து இந்த இருவருடன் சேர்ந்தால் ஜாதகனுக்கு நிச்சயம் மனநோய் உண்டாகும் கீழ்ப்பாக்கத்தில் சேர்க்கும் அளவிற்கு விவரமான மனநோய் உண்டாகும்

6ல் ராகுவும் செவ்வாயும்: இந்த சேர்க்கை ஆறாம் வீட்டில் இருந்தால், ஜாதகன் Fraud வேலைகளைச் செய்வான் அல்லது அதுபோன்ற வேலைகளுக்கு உட்படுத்தப் படுவான். அவன் அடிப்படையில் நல்லவனாக இருந்தால்கூட, இந்த அமைப்பு சுழ்நிலைகளை ஏற்படுத்தி, அவனை மோசடியான வேலைகளில் ஈடுபடச் செய்யும். அப்படி மோசடி வேலைகளில் ஈடுபடுபவர்களில் சிலர், மாட்டிக்கொண்டாலும் தப்பித்து விடுவார்கள். வேறு சிலருக்குத் தண்டனை கிடைக்கும்.

7ல் ராகுவும் செவ்வாயும்: இந்த சேர்க்கை ஏழாம் வீட்டில் இருந்தால், ஜாதகன் அல்லது ஜாதகிக்குக் கலப்புத் திருமணம் ஏற்படும். ஜாதி, மதம் என்று எல்லாவற்றையும் கடாசி விட்டு அல்லது தூர எறிந்து விட்டு, உருகி உருகிக் காதலித்துத் திருமணம் செய்துகொள்வார்கள். காதல் என்று இல்லாவிட்டலும், குடும்பச் சூழ்நிலையால் சிலருக்கு அப்படிப் பட்ட வாய்ப்பு உண்டாகும்

8ல் ராகுவும் செவ்வாயும்: இது ஆயுள்காரகனின் வீடு. இந்த இருவரின் சேர்க்கை இந்த இடத்தில் விரும்பத்தக்கதல்ல! சிலருக்கு தீ விபத்து ஏற்படலாம். சிலருக்கு வாகனங்கள், ஆயுதங்கள் அல்லது இயந்திரங்களால் விபத்து ஏற்படலாம். சிலருக்கு பூச்சிக்கடி அல்லது விஷத்தால் ஆபத்து நேரிடலாம். பூச்சி என்பது இங்கே பாம்பைக் குறிக்கின்றது சாமி. விஷம் என்பது Poison என்று பொருள் கொள்ளுங்கள். சில பெண்களுக்குக் கணவனே விஷமாக இருப்பான் அல்லது விஷமம் பிடித்தவனாக இருப்பான்.. அது இந்தக் கணக்கில் வராது.

9ல் ராகுவும் செவ்வாயும்: ஜாதகன் தர்ம, நியாயங்கள், நியதிகள் இல்லாதவன். அவைகள் கிலோ என்ன விலை, எங்கே கிடைக்கும்? என்று கேட்பான். தீய, அறமற்ற வழிகளில் பொருள் சேர்ப்பான். பலர் இன்று அந்த வழியில் தான் பொருள் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் இறைவன் இல்லை என்று சொல்லி, இறைவனுக்கு எதிராகவும், இறை நம்பிக்கையாளர்களுக்கு எதிராகவும் கொடி பிடிப்பார்கள். ஆனால் போர்டிங் பாஸ் வாங்குகிற காலம் வந்தவுடன், ரகசியமாக இறைவனை வணங்குவார்கள்.

10ல் ராகுவும் செவ்வாயும்: ஜாதகன் எப்படியேனும் பொருள் ஈட்ட முனைவான். பணத்திற்கும், வசதிகளுக்கும் அந்தஸ்திற்கும் அலைவான். நியாமற்ற வழியாயினும் பரவாயில்லை என்று காரியங்கள் செய்பவனாக இருப்பான். வேலையில் இருந்தால், தன்னுடைய மேல் அதிகாரிக்கு அல்லது முதலாளிக்கு அல்லது C.E.O விற்கு கால் அமுக்கிவிடக் கூடத் தயங்க மாட்டான். மகிழ்ந்து அதைச் செய்வான். சிலர், மனைவிக்கு கை, கால்களை அமுக்கி விடுபவர்களாக இருப்பார்கள் (Body Massage) அது இந்தக் கணக்கில் வராது!

11ல் ராகுவும் செவ்வாயும்: Best place for this combination. The native will live like a King. Will have wealth and all the comforts in life. Victory in all undertakings

12ல் ராகுவும் செவ்வாயும்: Worst place for this combination. The native will lose all the wealth and reputation. அவைகள் என்னனென்னவாக இருக்கும் என்று உங்கள் கற்பனை,மற்றும் அனுமானம் அல்லது முடிவிற்கு விட்டுவிடுகிறேன்

Admin•••11
avatar
எழுத்ததிகாரன்
30/7/2012, 8:52 pm
ராகு குரு

சண்டாளன் என்பதற்கு அகராதியைப் பார்த்தால் இப்படிப் பதில் இருக்கிறது: அது வசைச் சொல். பெரும் பாதகம் செய்பவன். சிறிதளவுகூட இரக்கம் இல்லாதவன்.a term of abuse.one who commits heinous crime; cruel person. அப்படிப்பட்ட தீயவன் யாருக்காவது நன்மை செய்வானா? செய்வான் என்கிறது ஜோதிடம். அதுவும் சில யோகங்களைக் கொடுப்பானாம். அதற்குப் பெயர் ஒன்றையும் சூட்டி மகிழ்ந்திருக்கிறது ஜோதிடக்கலை!

அதற்குப் பெயர்: குரு சண்டாள யோகம்!

அதானே பார்த்தேன். குருவோடு சேர்ந்தவுடன் அவனுக்கும் நல்ல பெயர் எடுக்கும் ஆசை வந்துவிடுமோ என்னவோ? யார் கண்டது? சானியா மிர்சாவுடன் சேர்ந்தால் நமக்கும் டென்னிஸ் ஆட்டத்தில் ஆர்வம் பிறக்காதா என்ன? சானியாவுடன் மாதத்தில் ஒரு நாளாவது மட்டையைத் தூக்கிக் கொண்டு ஆடிப்பார்த்துவிட மாட்டோமா என்ன?

This yoga is formed when Jupiter is in conjunction with or is aspected by Raahu or Kethu

The native is prone to act immorally and perform many misdeeds. However the results are not as frightening as they are made out to be. Different results are obtained for the combination in different houses however if benefic planets are present with this combination or this combination is aspected by benefic planets the results are auspicious as the inauspiciousness decreases.

ஆமாம் தீமைகள் குறைவதால் நன்மை என்கிறார்கள். சரி ஏற்றுக் கொள்வோம் அதை மட்டும்தான் நாம் செய்ய முடியும்! In different houses this combination gives different results as follows.

1. ராகு குரு கூட்டணி 8ல் இருந்தால் ஜாதகனுக்கு colic pains ஏற்படும். அது என்ன காலிக் பெயின்?

COLIC, Pain Abdomen. A severe paroxysmal pain in the abdomen, due to spasm, obstruction,
or distention of some one of the hollow viscera. {Hepatic colic}, the severe pain produced by the passage of a gallstone from the liver or gall bladder through the bile duct. {Intestinal colic}, or {Ordinary colic}, pain due to distention of the intestines by gas. {Lead colic}, {Painter's colic}, a violent form of intestinal colic, associated with obstinate constipation, produced by chronic lead poisoning. {Renal colic}, the severe pain produced by the passage of a calculus from the kidney through the ureter. {Wind colic}. See {Intestinal colic}, above.

2. இந்தக் கூட்டணி ஒன்பதில் இருக்க மூன்றாம் வீட்டில் சனியும் கேதுவும் இருக்கப் பிறந்த ஜாதகன், சட்டப்படி பிறந்த குழந்தையாக இருக்க மாட்டான் The native may be an illegitimate child. அடப்பாவமே!

3. நான்கில் ராகுவும் குருவும் கூட்டாக இருந்து, அவர்கள் மேல் ஒரு சுபக்கிரகத்தின் பார்வை விழுந்தால், ஜாதகன் செல்வந்தனாக இருப்பான். பக்தியில் திளைப்பவனாக இருப்பான். சிலர் நீதித்துறைக்குச் சென்று புகழ் பெறுவார்கள்.

4. லக்கினம் சுபக்கிரகத்தின் வீடாக இருந்து, அதை சந்திரனும் இருக்க, இந்த ராகு, குரு கூட்டணி 5 அல்லது 9ஆம் வீடுகளில் அமையப்பெற்றால், ஜாதகன் சிறந்த கல்வியாளனாகவும், செல்வந்தனாகவும், மக்களால் மதிக்கப்பெறுபவானவும்
இருப்பான்.

5. மகர லக்கினக்காரர்களின் 9ஆம் வீட்டில் அவர்கள் இருவரும் இருந்தால், ஜாதகன் பெரிய செல்வந்தனாக இருப்பான். அல்லது உருவெடுப்பான். பலரது மதிப்பையும் பெற்றவனாக இருப்பான். அவன் விரல் சொடுக்கில் எல்லாம் நடக்கும். எல்லா வாழ்க்கை வசதிகளுடனும் வாழ்வான். (இருக்காதா பின்னே? எல்லாம் பணம் படுத்தும் பாடு தம்பி, பாடு!)

6. அந்த அமைப்பு 3ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகன் மிகவும் துணிச்சலானவன். அதோடு அந்த அமைப்பை செவ்வாய் பார்வை இட்டால், அபரிதமான துணிச்சல் இருக்கும். எதற்கும் பயப்படமாட்டான். சர்வதேசத் துணிச்சல் என்று வைத்துக்கொள்ளுங்கள்

7. அதே அமைப்பு 6ல் இருந்து செவ்வாயின் பார்வை பெற்றால், ஜாதகன் புரிந்து கொள்ளச் சிரமமானவன். தான் பிறந்த மதத்தையே இழிவாகப் பேசக்கூடியவன். எல்லா மதங்களிலும் உள்ள சிறப்பைப் பேசாமல், அவற்றில் உள்ள சில ஒவ்வாத நியதிகளை மட்டுமே கையில் எடுத்துக் கொண்டு அதை மட்டுமே குறையாகப் பேசிக்கொண்டு திரிவான்.

8. பொதுவாக இந்த யோகம் நல்லதொரு யோகமாகக் கொண்டாடப் படுவதில்லை ஜாதகனுக்கு பல விரோதிகள் இருப்பார்கள். எப்போது வேண்டுமென்றாலும் அவர்கள் அவனைக் கவிழ்ப்பார்கள்.ஜாதகன் முறையற்ற சிந்தனைகளை உடையவனாக இருப்பான்.

9. இந்த அமைப்பில் ராகு குருவின் வலிமையைக் குறைப்பான். குரு அதீதமான சுபக்கிரகம், அவன் அதீதமான அசுபக்கிரகமான ராகுவுடன் சேர்ந்தால் என்ன ஆகும்? கிராமங்களில் சொல்வார்களே, எதோடு சேர்ந்த எதோ ஒன்று எதையோ தின்றது என்பார்களே, அதுதான் நடக்கும். அந்த எதோ எதோ என்னவென்று தெரிகிறதா? தெரியாதவர்களுக்கு மட்டும் அடுத்த வரியில் அதைச் சொல்லியிருக்கிறேன். மற்றவர்கள் அந்த வரியைப் படிக்காமல் தாண்டிச் செல்லும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பன்றியோடு சேர்ந்த பசுவும், 'அதைத்' தின்னும்!

10. சிலர் சொல்வார்கள் இந்த அமைப்பு நன்மை செய்யும் என்று. நடைமுறையில் அது இல்லை. ராகுவின் கோரத்தைக் குரு குறைப்பான் என்பார்கள்.யாரும் யாரையும் மாற்ற முடியாது. Donkey is always a donkey: It will not become a horse!

11. குரு குழந்தை பாக்கியத்திற்கான கிரகம், அவனுடன் சேரும் ராகு ஜாதகனின் 5ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகனுக்குக் குழந்தை பிறப்பது தாமதமாகும். சிலருக்கு குழந்தை இல்லாமலும் போகும். சிலரது மனைவி அடிக்கடி கருச் சிதைவுகளுக்கு உள்ளாவாள். அதைவிடக் கொடுமை, சிலருக்கு சற்று ஊனமான குழந்தை பிறக்கலாம்

12. இதே அமைப்பு 3ல் இருந்தாலும், நான்காம் வீட்டதிபதி நான்கைத் தனது பார்வையால் பார்க்காவிட்டாலும், ஜாதகனின் கல்வி பாதியில் நின்று போகும். நல்ல அறிவும் திறமையும் அவனிடம் இருந்தாலும் முறையான கல்வியை அவன் பெற முடியாது

13. இதே அமைப்பு ஏழில் இருந்தால், திருமண வாழ்வு சோகமாகிவிடும். சிலரது திருமணம் விவாகரத்தில் முடியும். இந்த அமைப்புள்ளவர்கள் கலப்புத் திருமணம் செய்தவர்களாக இருந்தால் தப்பித்துவிடுவார்கள். ஏழாம் அதிபனுடன் ராகு சேர்ந்தாலும் கலப்புத் திருமணம்தான்!

14. இந்தக் கூட்டணி அசத்தலாக வேலை செய்யும் இடம் பத்தாம் வீடு. ஜாதகன் தொழில் செய்தாலும் அல்லது வேலையில் இருந்தாலும் அவன் சர்வ அதிகாரம் மிகுந்தவனாக இருப்பான். அது நல்ல வழியில் வந்த அதிகாரமாக இருக்காது. குறுக்கு வழியில் வந்த (சைடு டிராக்கில்) அதிகாரமாக இருக்கும். தன் தொழிலுக்கு அல்லது வேலைக்கு வேண்டிய அத்தனை ஜிகினா வேலகளையும் செய்வதில் ஜாதகன் திறமைசாலியாக இருப்பான். அதை ராகு அவனுக்கு உகந்து வழங்குவார். உயர்வான நிலைக்குச் ஜாதகன் செல்வான். ராகு அதைத்தன் தாசா புத்திகளில் செய்வார்.

சைடு டிராக் வேலை என்பது காரியம் நடப்பதற்காக தன் முதலாளி அல்லது அலுவலக நிர்வாகிக்கு, கால் பிடித்துவிடுவதில் இருந்து கூஜா தூக்குவது வரை அத்தனை வேலைகளையும் செய்வது. பதிவில் எழுத முடியாத சில வேலைகளையும் ஜாதகன் செய்து எப்படியோ அடித்துப் பிடித்து மேன்மைக்கு வந்து விடுவான். எப்படியோ நன்றாக இருந்தால் நல்லதுதான். நம்மைப் பாதிக்காதவரை சரிதான் என்று அவன் உடன் இருப்பவர்கள் நினைப்பார்கள்.

1-ல் நன்மை இல்லை (திருமண வாழ்வில் சிக்கல்)

2-ல் நன்மை (வசதிகள், மனைவியால் செல்வம்)

3-ல் பாதி நன்மை (The native will marry a foreign lady) வெளி நாட்டில்
வசிக்கும் வாய்ப்புக் கிடைக்கும்

4-ல் பாதி நன்மை. ஏமாற்று வேலைகளின் மூலம் பணம் வரும். சொத்துக்கள் சேரும்

5-ல் தீமை.குழந்தை பாக்கியம் பாதிப்படையும். இறைவழிபாடு மட்டுமே பரிகாரம்

6-ல் தீமை. ஜாதகன் அறிவில்லாதவனாக இருப்பான்

7-ல் தீமை. ஜாதகனுக்கு 33 வயதிற்கு மேல் திருமணம் நடைபெறும். ஜாதகன் அந்த வயதிற்குள் பல ஆட்டங்களைப் போட்டுவிடுவான். என்ன ஆட்டமா? காமக் களியாட்டம்தான் சுவாமி!

8-ல் தீமை. ஜாதகனுக்கு, உடலில் பல கோளாறுகள் உண்டாகும். பல மருத்துவர் களுக்கு அவன் வேண்டப்பட்ட நோயாளியாக இருப்பான்.

9-ல் பாதி நன்மை, ஜாதகருக்கு வெளிநாட்டுப் பயணங்கள் கிடைக்கும். தர்மமில்லாத வழிகளில் பொருள் ஈட்டலும், வாழ்க்கையும் நடக்கும்

10-ல் நன்மை. ஜாதகர் பல தொழில்களைக் செய்வார். வசதியாக வாழ்வார்

11-ல் முழு நன்மை. ஜாதகன் பலருக்கும் ஆசானாக, வித்வானாக அல்லது வாத்தியாராக இருப்பார். செல்வாக்கு, சொத்து என்று எல்லாம் உடையவராக விளங்குவார்.

12-ல் முழு நன்மை. சுகபோகங்கள் நிறைந்தவர். சாதனைகளைப் படைக்கக்கூடியவர் நாட்டாமையைப் போல வாழ்வார். எந்தப் பிரச்சினையும் தன்னை அணுகாமல் திறமையாகத் தன்னைப் பாதுகாத்துக் கொள்வார். இங்கே சொல்லப்படுள்ளவைகள் அனைத்துமே பொதுப்பலன்கள். தனிப்பட்டவர்களுக்கு அவர்களின் ஜாதகங்களில் உள்ள வேறு அமைப்புக்களை வைத்து இந்தப் பலன்கள் கூடலாம்; குறையலாம் அல்லது இல்லாமலும் போகலாம் அதைக் கவனத்தில் கொள்க!

Admin•••12
avatar
எழுத்ததிகாரன்
30/7/2012, 8:53 pm
கேதுவைப் பற்றிய பாடம்:

முக்திக்கு வழிகாட்டுபவர் கேது. மீண்டும் ஒரு பிறவி எடுக்காமல் இருக்க வழி காட்டுபவர் கேது. இந்தப் பிறவியில் அனுபவிக்க வேண்டிய அனைத்தையும் அனுபவிக்க முடியமா என்று தெரியவில்லை.ஆகவே இன்னுமொரு பிறவியிருந்தால் நல்லது என்று நினைப்பவர்கள் கேதுவை வணங்க வேண்டாம். உங்கள் வாழ்க்கைப் பாதையைக் கடினமாக்குபவர் கேது. பாதையில் பல தடைகளை உண்டாக்கி, உங்களுக்கு பல மனக்கவலையை ஏற்படுத்தி, பல துன்பங்களை ஏற்படுத்தி அதன் மூலம் மனதைப் பக்குபவப்படுத்துபவர் அவர். முன் ஜன்மப் பாவச் சுமைகளைப் போக்க உதவுபவர் அவர்.

கேது செவ்வாயைப் போல செயல்படுபவர். அவருடைய திசா புத்திகளில் விபத்து ஏதேனும் ஏற்பட்டால் அனேகமாக அது நெருப்பு சம்பந்தப்பட்ட விபத்தாக இருக்கும். நமது முன் மற்றும் நடப்புக் கர்ம வினைகளை எல்லாம் கணக்காக வைத்திருக்கும் கணக்கப் பிள்ளை அவர். சுபக்கிரகங்களோடு சேர்ந்திருக்கும் கேது, நாம் எதிர்பாராத நன்மைகளைச் செய்யக்கூடியவர். கேது ராகுவைப் போன்றவர். பல செயல்களில் அவரை ஒத்திருப்பார்.

சொந்த வீடு இல்லாதவர். இருக்கின்ற வீட்டைச் சொந்தமாக்கிக் கொள்வார். ராகு சனியைப் போல செயல் படக்கூடியவர் என்றால், கேது செவ்வாயைப் போல செயல்படக்கூடியவர். பல சமயங்களில் கேது, செவ்வாயின் எதிர்மறையான செயல்களைப் போல தீயவற்றைச் செய்யக்கூடியவர் (Ketu in certain way resembles Mars. But many times,activates only the negative side of Mars)

கேது, சூரியன், மற்றும் சந்திரன் ஆகிய மூன்று கிரகங்களும், வான வெளியில் ஒரே பாகைக்கு வரும்போது சந்திரகிரணம் நிகழும். இன்றைய விஞ்ஞானம் இதை ஒப்புக்கொண்டிருக்கிறது. 1400 ஆண்டுகளுக்கு முன்பே, எந்தவித உபகரணங்களும் இன்றி இதை நம் முன்னோர்கள் கணித்து எழுதிவைத்து விட்டுப் போயுள்ளார்கள்.

மருந்து தொழில், மருத்துவத்தொழில் ஆகியவற்றில் இருப்பவர்கள் வெற்றி பெறுவதற்கு கேதுவின் பார்வை அல்லது சேர்க்கை கிடைக்க வேண்டும்.

The two imaginary nodes (சாயாக் கிரகங்கள்) Rahu and Ketu are the mysterious forces and show in the birth chart both karmic and spiritual influences. Like Rahu, Ketu is also not a real luminary and therefore doesn't rule any zodiac sign. (சொந்த வீடு இல்லாமல் போனது)

Admin•••13
avatar
எழுத்ததிகாரன்
30/7/2012, 8:57 pm
பன்னிரெண்டு வீடுகளிலும் கேது இருப்பதற்கான பலன்கள்

லக்கினத்தில் கேது: ஜாதகன் புத்திசாலியாக இருப்பான். அதிர்ஷ்டம் உடையவனாக இருப்பான். பொதுவாக அமைதியானவன். காரியவாதி. மற்ரவர்களுக்குத் தெரியாத விஷயங்களும் இந்த அமைப்பினருக்குத் தெரியும். உள்மன அறிவு மிக்கவர்கள் சிலருக்குக் கல்வி அறிவு குறைவாக இருப்பினும் ஞானம் இருக்கும். மற்றவர்களுடன் யதார்த்தமாகப் பழக மாட்டார்கள். தங்களுக்கென்று ஒரு எல்லையை ஏற்படுத்திக் கொண்டு அதற்குள்ளாகவே வாழ்பவர்கள்.

சிலர் ஜாதகத்தில் உள்ள வேறு அமைப்புக்களால், விதண்டாவாதம் செய்பவர்களாக இருப்பார்கள். மற்றவர்களையும் வாதம் செய்யத்தூண்டும் அளவிற்குத் திறமை மிகுந்து இருக்கும்! மகரம் அல்லது கும்ப லக்கினத்தில் கேது இருக்கும் ஜாதகன் இதற்கு விதிவிலக்கானவன். கேதுவிற்கு அவை இரண்டும் உகந்த லக்கினங்களாகும்.

இரண்டில் கேது: ஜாதகன் எதையாவது பேசிக்கொண்டே இருப்பவன் (full of excessive talk) படிப்பைப் பாதியில் விட்டவன் அல்லது படிக்காதவனாக இருப்பான். குறுகிய கண்ணோட்டம் உடையவனாக இருப்பான். குடும்ப வாழ்க்கை 32 வயதிற்கு மேல்தான் உண்டாகும். சிலர் ஜாதகத்தில் உள்ள வேறு அமைப்புக்களால், படித்தவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுடைய சொத்திற்கு ஆசைப் படுபவர்களாக இருப்பார்கள்.

மூன்றில் கேது: ஜாதகன் உயர்ந்தகுடியில் பிறந்தவனாக இருப்பான். அதாவது உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவனாக இருப்பான். தர்ம சிந்தனை மிக்கவன். தூணிச்சல் மிக்கவன். சாதனைகளைச் செய்யக்கூடியவன். எதிரிகளை ஒழித்துக் கட்டக்கூடியவன். செல்வத்தை அனுபவிக்கக் கூடியவன்.வளம் பெறக்கூடியவன். எல்லாவிதமான சுகங்களையும் அனுபவிக்கக் கூடியவன். ஜீனியசாக (genius) இருப்பான்.

நான்கில் கேது: இந்த இடம் கேதுவிற்கு உகந்த இடம் அல்ல. மாற்றிச் சொன்னால் ஜாதகனுக்கு உகந்தது அல்ல! நான்காம் வீடு இருதயத்திற்கான இடம். இங்கே கேது அமர்ந்தால் ஜாதகனுக்கு இதய நோய்கள் (heart) வரலாம். வரும் என்று அடித்துச் சொல்லாமல், வரலாம் என்று சொல்வதற்குக் காரணம், இந்த வீட்டில் சுபக்கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை இருந்தால் வராது. ஜாதகனுக்கு மகிழ்ச்சி, சொத்துக்கள், சொந்தங்கள், வண்டி வாகனங்கள் என்று எல்லாம் மறுக்கப்பட்டிருக்கும். உறவுகளே பகையாக மறிவிடும். சிலருக்குத் தாயன்பு என்பதே இல்லாமல் போய்விடும்.

ஐந்தில் கேது: ஜாதகன் கடினமான ஆசாமி. மற்றவர்களுடன் ஒத்துப்போக முடியாதவனாக ஜாதகன் இருப்பான். ஜாதகனுக்கு சந்ததி இருக்காது. இருந்தாலும் பிரச்சினைக்கு உரியதாக இருக்கும். அஜீரணக்கோளாறுகள் இருக்கும். அதனால் மேலும் பல நோய்கள் உண்டாகி வாட்டும். பாவச் செயல்களில் ஈடுபாடு இருக்கும். மகிழ்ச்சி இருக்காது. இந்த அமைப்பை சந்நியாச யோகம் என்பார்கள். அதுவே சுபக்கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை இருந்தால் சாம்ராஜ்யத்தை ஆளும் யோகமாக மாறிவிடும்.

ஆறில் கேது: ஜாதகன் அவன் இடத்தில், அவனுடைய இனத்தில் அல்லது அவனுடைய சமூகத்தில் தலைவனாக இருப்பான். உயர்கல்வி பெற்றிருப்பான். தர்மசிந்தனை உடையவனாக இருப்பான். சொந்த பந்தங்களை நேசிப்பான். பல பெருமைகளுக்கு உரியவனாக இருப்பான். பலதுறைகளிலும் அறிவு உள்ளவனாக இருப்பான். பெருந்தன்மை உடையவனாக இருப்பான். கேதுவிற்கு இந்த இடம் மிகவும் உகந்ததாகும். வயிற்றுக் கோளாறுகள் (stomach disorders) உண்டாகும்

ஏழில் கேது: ஜாதகனுக்கு, அவனுடைய மனைவியால் மகிழ்ச்சி கிடைக்காது. நடத்தை சரியில்லாத பெண்களுடன் ஜாதகனுக்கு நட்பு அல்லது உறவு இருக்கும். அவர்களுக்காக ஜாதகன் உருகக்கூடியவன். வாழ்க்கையில் வளமை இருக்காது. மன அழுத்தங்களை உடையவன்.பயணிப்பதில் ஆர்வமுள்ளவன். அடிக்கடி பிரச்சினைகளில் சிக்கக்கூடியவன். இந்த அமைப்பை உடைய சில ஜாதகர்களுக்கு நோய்வாய்ப்பட்ட மனைவி அல்லது கணவன் அமையக்கூடும்.

எட்டில் கேது: ஜாதகன் அதீத புத்திசாலி. மனதை ஒருமுகப்படுத்தி செயலாற்றக் கூடியவன். சிலருக்கு ஆயுதங்களால் விபத்துக்கள் நேரிடும். சிலர் குறைந்த ஆண்டுகளே உயிர் வாழ்வார்கள். பொதுவாக எட்டில் கேது இருந்தால் ஆயுள்தோஷம். சிலருக்கு மாற்றான் தோட்டத்து மல்லிகை மீது மையல் இருக்கும். அடுத்தவன் சொத்தை அபகரிக்கும் ஆசை இருக்கும். சிலர் கஞ்சனாக இருப்பார்கள். சிலருக்குப் புகழும் தலைமை ஏற்கும் தகுதியும் இருக்கும்.

ஒன்பதில் கேது: ஜாதகன் பல பாவச்செயல்களைச் செய்யகூடியவன், பெற்றவர்களின் அன்பு, பாசம், பரிவு போன்றவைகள் கிடைக்காது. காம இச்சைகள் மிகுந்தவன். சிலர் ஆன்மிகம், மத உணர்வு, தர்ம நியாயங்கள் இவற்றை எல்லாம் உதறி விடுவார்கள். அப்படி உயர்ந்த சிந்தனைகள் உடையவர்களைக் குறை கூறுவதில் ஜாதகன் ஆர்வமுடையவனாக செயல்படுபவனாக ஜாதகன் இருப்பான். சிலர் தங்களுடைய பாவச் செயல்களினால் தாழ்ந்து போய்விடுவார்கள்.

பத்தில் கேது: மக்கள் அனைவரையும் நேசிக்கும் மனது அல்லது பக்குவம் ஜாதகனுக்கு இருக்கும். சமூகக் காவலனாக ஜாதகன் இருப்பான். அல்லது அந்த நிலைக்குச் ஜாதகன் உயர்வான். He will engage himself in the act of donating money, goods, services, time and/or effort to support a socially beneficial cause, with a defined objective and with no financial or material reward to the donor. In a more general sense, activity intended to promote good or improve human quality of life. ஜாதகன் செல்வந்தனாக இருப்பான். வாழ்க்கை முறைகள், வாழ்க்கைத் தத்துவங்கள் ஆகியவற்றை அறிந்தவனாக இருப்பான். திறமைசாலியாக இருப்பான். செய்யும் தொழிகளில் நுட்பம் அறிந்தவனாக இருப்பான். கேது இந்த இடத்தில் இருப்பது ஒருவனின் தொழில் மேன்மைக்கு உகந்ததாகும். This is the best place for professional enhancement.

பதினொன்றில் கேது: ஜாதகன் செல்வந்தனாக இருப்பான் அல்லது அந்த நிலைக்கு உயர்வான். அதிகம் படித்தவனாக இருப்பான். கல்வியாளர்கள் மத்தியில் பெருமைக்கும் புகழுக்கும் உரியவனாகத் திகள்வான். மகிழ்ச்சியில் திளைப்பான். பல நல்ல குணாம்சங்கள் இருக்கும். பெருந்தன்மையும், நல்ல நோக்கங்களும் உடையவனாக ஜாதகன் இருப்பான். அவன் தன்னுடைய செயல்களால் பலரிடமும் நல்ல மதிப்பைபயும் மரியாதையையும் பெறுவான்.

பன்னிரெண்டில் கேது: இந்த இடத்தில் கேது இருந்தால் ஜாதகனுக்கு அடுத்த பிறவி கிடையாது. வீடு பேற்றை அடைந்து விடுவான் என்று நூல்கள் கூறுகின்றன. சரியாகத் தெரியவில்லை பல் ஜோதிட நூல்கள் இதை வலியுறுத்திக் கூறுவதால் நம்புவோம். ஜாதகன் அடிக்கடி மாறக்கூடியவன். காலையில் ஒரு பேச்சு மாலையில் ஒரு பேச்சு என்றிருக்கும். நிலையில்லாதவன்ஊர்சுற்றி, சிலருக்கு, கண்கள் பாதிப்பிற்குள்ளாகும். பாவங்களைச் செய்துவிட்டு மறைக்கக் கூடியவன். துன்பங்களில் உழல்பவன். சிலர் மாய, ஜால வேலைகளில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள். சிலர் தனிமையை விருபுவார்கள். தனிமைப்பட்டும் வாழ்வார்கள்.

Admin•••14
avatar
எழுத்ததிகாரன்
30/7/2012, 8:58 pm
கேது திசைப் பலன்கள்.

முன் பாடத்தில் விவரமாக உள்ளது. அதைப் படியுங்கள். சுருக்கமாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்காகக் கீழ் கொடுத்துள்ளேன்.

கேதுவின் மகா திசையில், குரு புக்திக் காலம் (sub period of Jupiter) 11மாதம் 6 நாட்கள் மற்றும் கேதுவின் மகா திசையில், புதன் புத்திக் காலம் (sub period of Mercury) 11 மாதம் 27 நாட்கள். ஆகிய நாட்கள் மட்டுமே நன்மையாக இருக்கும். அதாவது ஏழாண்டு காலப்பலனில் சுமார் இரண்டாண்டு காலம் மட்டுமே நன்மை பயக்கூடியதாக இருக்கும்

கேதுவின் கோச்சாரப் பலன்கள். அதாவது கோள்சாரத்தில், தனது சுற்றில் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கும் காலத்தில் கேதுவால் உண்டாகும் பலாபலன்கள். கோள்சாரம் சந்திர ராசியை வைத்துத்தான் கணக்கில் வரும். அதை நினைவில் கொள்க!

1ல்: * Loss, ill-health or disease
2ல்: * Loss of money
3ல்: * Happiness, gain, increase
4ல்: * Fear, trouble both physical or mental
5ல்: * Sorrow, loss of money
6ல்: * Happiness, gain of money
7ல்: * Evil state of affairs, illness
8ல்: * Loss, threatened trouble
9ல்: * Sinful actions, humility
10ல்: * Fear, sorrow
11ல்: * Good name and fame, gain of money
12ல்: * Physical ill-health or mental distress, enmity
-------------------------------------------------------------------------------------------
இங்கே கூறியிருப்பவை அனைத்துமே பொதுப்பலன்கள். தனிப்பட்ட ஜாதகங்களில் உள்ள மற்ற அமைப்புக்களை வைத்து, இவைகள் கூடலாம் அல்லது குறையலாம் அல்லது இல்லாமலும் போகலாம்.

Admin•••15
avatar
எழுத்ததிகாரன்
30/7/2012, 9:00 pm
கேது & குரு

குரு தன்னுணர்விற்கு உரிய கிரகம். கேது தன்னைப்பற்றி முழுமையாக அறிவதற்கு உள்ள கிரகம். இரண்டும் சேரும்போது, ஜாதகன் மனித வாழ்வின் அமைப்பையும், மனித வாழ்வின் நோக்கத்தையும் முழுமையாக உணர்வான். அதாவது அவனுக்கு ஞானம் கிடைக்கும். இறுதியில் பிறப்பிலிருந்து விடுபட்டு மோட்சத்தை அடைவான். சில ஜாதகர்களுக்கு இதே கூட்டணி (குரு வக்கிரம் பெற்று இருப்பின்) சமுதாயத் திற்கு எதிரான சிந்தனையை ஜாதகனுக்குக் கொடுக்கும். போதைப் பொருட் களுக்கு அடிமைப்படுத்தும், கீழானவர்களுடன், தீய சக்திகளுடனும் ஜாதகனுக்குப் பழக்கத்தை உண்டு பண்ணும்.

1, 4, 5, 9 or 12 ஆகிய வீடுகளில் இக்கூட்டணி அமைவது நல்லது. எட்டாம் வீட்டில் இக்கூட்டணி இருப்பது மட்டும் நன்மை இல்லை. எட்டாம் இடத்துக் கூட்டணி ஜாதகனுக்கு பல நோய்களை உண்டாக்கக்கூடும். 2,3,6,10 or 11 ஆகிய வீடுகளில் இக்கூட்டணி இருந்தாலும் ஓரளவிற்கு நன்மை செய்யும். தீமை இல்லை! 7ல் இருப்பது சராசரி. நல்லதும் கெட்டதும் கலந்தது.

கேது & சுக்கிரன்: venus & ketu have opposite gunas and on physical level, ketu does hammer (curtail) venus's natural significations. சுக்கிரன் கேது கூட்டணி 1ல் இருந்தால் ஜாதகனுக்கு இல்லற வாழ்வில், குறிப்பாக மனைவியால் பிரச்சனைகள் உண்டாகும். சுக்கிரன் கேது கூட்டணி 2ல் இருந்தால் ஜாதகனுக்கு இரு தாரங்கள் அமையும். இரண்டு குடும்பங்கள் அமையும். இரண்டு குடும்பங்களிலும் மாட்டிக்கொண்டு, "எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? அங்கே எனக்கோர் இடம் வேண்டும்" என்று பாடுவான்.

சுக்கிரன் கேது கூட்டணி 3ல் இருந்தால் ஜாதகன் செய்யக்கூடாத செயல்களைச் செய்துவிட்டு அடிக்கடி அவதிப்படுவான். இந்த அமைப்பிலுள்ள சிலர் போதைப் பொருட்களுக்கு அடிமைப்பட நேரிடலாம். அது என்ன சிலர்? சரியாகச் சொல்லுங்கள்! அதாவது இந்தக் கூட்டணி 3ல் இருக்க லக்கினாதிபதி வீக்காக இருப்பவர்கள் மட்டும்தான் அந்தச் சிலர். போதுமா?

சுக்கிரன் கேது கூட்டணி 4ல் இருந்தால் ஜாதகனின் நடத்தைகள் சரியாக இருக்காது. அவனுடைய நட்புகளும் சரியாக இருக்காது. சுக்கிரன் கேது கூட்டணி 5ல் இருந்தால் ஜாதகன் காதல், கத்திரிக்காய் என்று அலைந்து துன்பப்படுவான். திருப்தியான காதலி கிடைக்க மாட்டாள். எவளையாவது காதலித்துத் திருமணம் செய்து கொண்டு விட்டு அவள் கையால் நித்தமும் அடி வாங்குவான்.

சுக்கிரன் கேது கூட்டணி 6ல் இருந்தால் ஜாதகனுக்கு தன்னைவிட வயதில் மூத்த
பெண்கள் அல்லது விதவைகள் போன்றோருடன் முறையில்லாத உறவுகள் ஏற்படும்.
'அந்த' விஷயத்தில் ஜாதகன் அவதிப்படவே பிறந்தவன். சுக்கிரன் கேது கூட்டணி 7ல் இருந்தால் ஜாதகனுக்கு அவன் மனைவியுடன் ஒத்துப்போகும் வாழ்க்கை அமையாது. விவகாரமான, வில்லங்கமான வாழ்க்கை அமையும்.

சுக்கிரன் கேது கூட்டணி 8ல் இருந்தால் ஜாதகன் சொத்து, சுகங்களை இழந்து அவதிப்பட நேரிடும். வண்டி வகனங்களைத் தொலைத்துவிட்டு நடந்துபோக நேரிடும். அவைகள் இருந்தாலும், நிம்மதி இருக்காது. சுக்கிரன் கேது கூட்டணி 9ல் இருந்தால் ஜாதகனுக்குப் பல யோகங்கள் உண்டாகும். ஜாதகனுக்கு அனைத்துக் கலைகளிலும் தேர்ச்சி உண்டாகும்.

சுக்கிரன் கேது கூட்டணி 10ல் இருந்தால் ஜாதகன் நிதி நிறுவனங்களை நடத்திப் பெரும்பொருள் ஈட்டுவான். சுக்கிரன் கேது கூட்டணி 11ல் இருந்தால் ஜாதகன் மருத்துவத்துறையில் அல்லது ரசாயனத்துறையில் ஈடுபட்டு பெரும் புகழ் பெறுவான். சுக்கிரன் கேது கூட்டணி 12ல் இருந்தால் ஜாதகனுக்கு வாழ்க்கை போர்க்களமாக இருக்கும். கணவனுக்கு மனைவியும், மனைவிக்குக் கணவனும் எதிரிகளாக இருப்பார்கள்.

புதனுடன் கேது சேர்ந்திருந்தால் கிடைக்ககூடிய பலன்:

பொதுவாக புதனுடன் சுபக்கிரகங்கள் சேர்ந்திருப்பது நன்மை பயக்கும். The native will get positive reults. தீய கிரகங்கள் சேர்ந்தால் நல்லதல்ல! புதன் புத்திநாதன் என்பதால் ஜாதகனின் புத்தி தீய வழிகளில் நன்றாக வேலை செய்யும். புதனுடன், சனி அல்லது ராகு அல்லது கேது சேர்ந்தால் ஜாதகனின் புத்தி கிரிமினல் வேலைகளை நன்றாகச் செய்யும். ஜாதகன் யாரையும் தந்திரமாக அல்லது நயவஞ்சகமாக அல்லது அசத்தலான பேச்சால் கவிழ்ப்பதில் சூரனாக இருப்பான்.

எல்லோருமே அப்படியா? இல்லை! வீக்காக உள்ள புதனுடன் சேரும் கிரகங்களினால் மட்டுமே ஜாதகன் அப்படி இருப்பான். வலிமையாக உள்ள புதன் சேரும் தீய கிரகங்களையும் தன்னுடன் சேர்த்து தன்னுடைய புத்தியை ஆக்க வழியிலேயே செலவழிக்கும். இருந்தாலும் சேர்கின்ற தீய கிரகத்தால் அவனுடைய செயல்பாடுகள் முழுமையான பலனைத் தராது. உதாரணத்திற்கு லக்கினத்தில் புதனும் கேதுவும் இருந்தால் ஜாதகன் மிகவும் கெட்டிக்காரனாக இருப்பான். highly intellignt ஆக இருப்பான். இருந்தாலும் அடிக்கடி மனச்சோர்வு ஏற்படும். செயல்களின் வேகம் குறையும். உடல் உபத்திரவங்களால் (லக்கினம் உடல் சம்பந்தப்பட்ட வீடு) பல செயல்களைக் கைவிட நேரிடும்.

வீட்டின் பரலும், புதனின் பரலும் அதிகமாக இருந்தால் மேற்கூறிய தொல்லை இருக்காது. இரண்டாம் வீட்டில் இந்த அமைப்பு இருந்தால் ஜாதகனுக்குக் கல்வியில், வித்தைகளில், சாஸ்திரங்களில் மிகுந்த ஈடுபாடு இருக்கும். இரண்டாம் வீட்டைப் பார்ப்பதற்கு, இப்படி ஒவ்வொரு கிரகமாக நினைவில் வைத்துப் பலன் பார்த்து அல்லாடுவதைவிட வேறு ஒரு குறுக்கு வழி இருக்கிறது.

குறுக்கு வழி என்றால்தான் நமக்குப் பிடிக்குமே! வாருங்கள் முதலில் அதைப் பார்ப்போம். இரண்டாம் வீட்டை வைத்துத்தான் ஒருவனுடைய நிதி நிலை தெரியவரும் It is called as house of finance. இரண்டாம் வீட்டில் 25ற்குக் கீழான பரல்கள் இருந்தால் ஜாதகனுக்கு எப்போது பார்த்தாலும் பணப் பிரச்சினை இருக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் பத்தாது; கையில் தங்காது. அந்த வீட்டிற்கு இன்னொரு பணியும் உண்டு. ஆமாம் அது குடும்ப ஸ்தானம் அங்கே 25ற்குக் கீழான பரல்கள் இருந்தால் ஜாதகனுக்குக் குடும்ப வாழ்வு மகிழ்ச்சியாக இருக்காது.

20 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால் ஜாதகன் குடும்பம் நடத்த மாட்டான். ஐஷ்வர்யாராயைப் போன்ற அழகான பெண்னைத் திருமணம் செய்து வைத்தாலும் அவன் குடும்பம் நடத்தமாட்டான். அவளை இங்கே படுக்க வைத்துவிட்டு அவன் தூர தேசம் ஒன்றிற்குப் பொருள் ஈட்டப் போய்விடுவான் அல்லது வேலை நிமித்தமாகப் போய்விடுவான்.

பணம் சம்பாதிப்பதற்காக தூர தேசங்களுக்குச் சென்றவர்களில் 90% திரும்பி வந்ததாகச் சரித்திரம் இல்லை. பணத்தை மட்டுமே பிரதானமாகத் தேடுபவன் திருப்தியடைந்ததாக வரலாறு இல்லை. ஆகவே பணத்தின் மேலே மட்டும் குறியாக இருப்பவன் வாழ்க்கையின் மற்ற சந்தோஷங்களை இழந்துவிடுவான். எனக்குத் தெரிந்த ஒருவர் திருமணமாகி ஒரு இரண்டுவருட காலம் மட்டுமே குடும்பம் நடத்தினார். திருமணத்திற்கு அடையாளமாக ஒரு குழந்தை பிறந்தது. மனைவியும், குழந்தையும் நலமாக வாழ வேண்டும் என்று பொருள் ஈட்டலுக்காக அரபு தேசத்திற்குச் சென்றார். சென்றவர் சென்றவர்தான். ஆண்டுகள் முப்பது ஆகிவிட்டன. இன்றுவரை திரும்பவில்லை. என்.ஆர்.ஐக் கணக்கில் இருப்பு ஏறிக்கொண்டே இருக்கிறது. மனம் மட்டும் Blank ஆகவே இன்னும் இருக்கிறது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தாயகத்திற்கு வருவார். ஒரு பத்து தினங்கள் மட்டும் இங்கே இருந்துவிட்டு மீண்டும் விமானம் ஏறிப் பறந்து விடுவார். அதாவது 730 நாட்களுக்கு ஒருமுறை 10 தினங்கள் மட்டுமே இங்கே இருப்பார்.

புதனும் கேதுவும் சேர்ந்து 3ஆம் வீடு, 9ஆம் வீடு, 10ஆம் வீடு, 11ஆம் வீடு ஆகிய வீடுகளில் இருந்தால் மட்டுமே சில நற்பயன்கள் கிடைக்கும். மற்ற வீடுகளில் அவர்களின் சேர்க்கையால் நன்மை இல்லை!

Admin•••16
avatar
எழுத்ததிகாரன்
30/7/2012, 9:02 pm
கேதுவும் செவ்வாயும் சேர்ந்திருந்தால் ஏற்படும் பலன்கள்:

1ல்: நல்லதல்ல! The native should be careful. அடிக்கடி விபத்துக்கள் நேரிடும். அதனால் உடம்பு பாதிக்கப்படலாம். தீக்காயங்களால் உடம்பில் பாதிப்புக்கள் ஏற்படலாம்.

2ல்: Not a good place for this combination Expense oriented horoscope. ஜாதகனின் சொத்துக்கள் தீய வழிகளில் கரையும். படிப்பு தடைப்படடும். The native may become a school or college drop out!

3ல்: The native will be courageious. ஜாதகன் அதீத துணிச்சல் மிக்கவனாகத் திகழ்வான். அடுத்தவர்களுக்குச் ஜாதகன் மேல் ஒரு பய உணர்வு இருக்கும் சிலர் அந்தத் துணிச்சலை நல்ல வழியில் பயன்படுத்துவார்கள். சிலர் அதே துணிச்சலைக் கெட்ட வழிகளில் பயன்படுத்துவார்கள்

4ல்: The native will be conservative. பழசையே பேசிக்கொண்டிருப்பான். எங்க தாத்தா காலத்தில் என்று ஆரம்பித்தால் விடமாட்டான். கேட்கிறவன் அவனாக ஓட்டம்பிடித்தால் மட்டுமே தப்பிக்கலாம். ஜாதகர் பழமையைப் போற்றுபவராக இருப்பார். கல்வியில் தடை ஏற்படும்

5ல்: This place is called house of mind. This is also not a good place for this (ketu & Mars) combination. அடிக்கடி மனநிலை பாதிக்கப்படும். தலையில் உபத்திரவம் ஏற்படும். சிலர் தங்கள் குழந்தைகளை இழக்க நேரிடும். பெண்களுக்குக் குழந்தை உண்டாவதில் சிக்கல்கள் இருக்கும். அப்படியே உண்டானலும் பிரசவம் சிக்கலாக இருக்கும்.

6ல்: ஜாதகனின் பெயர் ரிப்பேராகி இருக்கும். அல்லது தன் பெயரைக் கெடுத்துக் கொள்ளும் விதமாக ஜாதகன் நடந்து கொள்வான். எதிர்ப்புக்களை ஜாதகன் எதிர் கொள்ள நேரிடும். வம்பு வழக்கு, மற்ரும் கட்டைப் பஞ்சாயத்துக்களில் ஜாதகன் வெற்றி பெறுவான். செவ்வாயும் ஆறாம் இடமும் சேர்ந்திருப்பதால் ஜாதகன் இரத்த சம்பந்தமான நோய்களுக்கு ஆளாக நேரிடும்.

7ல்: இந்த அமைப்பு ஏழில் இருந்தால் ஜாதகன் கலப்புத் திருமணம் செய்து கொள்வான். சிலர் வேற்று மதப் பெண்ணை மணந்து கொள்வார்கள். சம்பிரதாயங்களைக் கிலோ என்ன விலை என்று ஜாதகன் கேட்பான். இந்த அமைப்பு இருக்கும் பெரும்பான்மையினருக்குக் காதல் திருமணம் தான் நடைபெறும்!

8ல்: இந்த அமைப்பு எட்டாம் இடத்திற்கு நல்லதல்ல. பல பிரச்சினைகள் துன்பங்கள் ஏற்படும். ஜாதகன் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்குத் தள்ளப்படுவான். சிலர் அதற்கு முயற்சியும் செய்வர்கள். வாழ்க்கை சர்ச்சைக்கு உரியதாக இருக்கும். சுபக்கிரகங்களின் பார்வை இந்த இடத்தில் இருந்தால் இந்த பாதிப்புக்கள் எதுவும் இருக்காது!

9ல்: ஜாதகனுக்குக் கெட்டிக்காரத்தனம் இருக்கும். சிலர் மத போதகராக அல்லது மதப் பேச்சாளராகச் சிறப்படைவார்கள். மேலும் ஒரு கிரகத்தின் தீய பார்வை விழுந்தால் ஜாதகன் தீவிரவாதியாகி விடுவான்.

10ல்: ஜாதகன் சிறந்த நிர்வாகத் திறமைகள் உடையவனாக இருப்பான். அதிகாரத்துடன் கூடிய பெரிய பதவிகள் கிடைக்கும்.

11ல்: பொதுவாக ஜாதகன் அரசியலில் அல்லது அரசில் பணிபுரிந்து புகழ் பெறுவான். வளமையோடும், செல்வாக்கோடும் இருப்பான்

12ல்: ஜாதகன் குணமில்லாதவனாக இருப்பான். எப்போது என்ன செய்வான் என்பது யாருக்கும் தெரியாது. ஏன் அவனுக்கே தெரியாது. சொல்லப்பட்டுள்ள அனைத்துமே பொதுப்பலன்கள். ஜாதகத்தில் உள்ள பிற அமைப்புக்களைவைத்து
அவைகள் கூடலாம் அல்லது குறையலாம். அல்லது இல்லாமலும் போகலாம்

Admin•••17
avatar
எழுத்ததிகாரன்
30/7/2012, 9:04 pm
கோச்சாரப்படி சந்திரன், உங்கள் ராசிக்கு 3, 6, 8, 12ஆம் போன்ற இடங்களில் சஞ்சரிக்கும் தினங்களில் (சுமார் 9 நாட்கள்) உங்களுக்கு மன மகிழ்ச்சி இருக்காது அது பொது விதி.

சந்திரன் ஜாதகத்தில், உச்சம் பெற்றோ அல்லது கேந்திர, திரிகோணங்களில் அமர்ந்திருந்தாலோ அல்லது சுய வர்க்கத்தில் 5ம் அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருந்தாலோ அல்லது சுபக்கிரகங்களுடன் கூட்டாக இருந்தாலோ உங்களுக்கு பெரிதாக மனப் பிரச்சினைகள் வர வாய்ப்பில்லை. எதையும் தாங்கும் மனது இருக்கும். பெரிய அளவில் மன பாதிப்புக்களும் ஏற்படாது. அனால் அதே நேரத்தில் மனகாரகன் சந்திரனுடன், ஜாதகத்தில் தீய கிரகங்கள் சேர்ந்திருந்தால் தொல்லைதான். எப்போதும் மனக்கவலை, மன உளைச்சல் இருக்கும்.

கேது ஞானத்தைத் தருவான். ஆனால் அதற்கு விலையாக நீங்கள் பல பிரச்சினைகள் துன்பங்களைச் சந்தித்தாக வேண்டும். அந்த ஞானம் ஜஸ்ட் லைக் தட் என்று ஈசியாகக் கிடைக்காது.

Ketu is natural enemy for moon The Ketu / Moon association shows a native who experiences deep levels of doubt and criticism of their own mind and mental outlook.

This is one of the most difficult placements as it can make for a deeply discontented mind and extreme moodiness. Typical worldly experiences and pleasurable emotions can lead to painful events. Many of the moods are from past life events that overtake the native, and then pass. Smaller disturbances trigger mental worries that neither the native, nor anyone else can control. Yet generally the native is good at controlling the emotions. Yet control is not the same as having the detachment
to enjoy without longing or regret. Ketu with the Moon on the positive note gives intuition, introspection, and interest in meditation and silence

சந்திரனுடன் கேது சேர்ந்தால், நீங்கள் பாதி ஞானி. முழு ஞானியாவது என்பது ஜாதகத்தில் உள்ள பிற அம்சங்களைப் பொறுத்தது. கேதுவும் சந்திரனும் சேர்ந்து ஜாதகத்தில் இருப்பதற்கு உகந்த இடங்கள் ஆறாம் வீடு, 9ஆம் வீடு, 10ஆம் வீடு மற்றும் பதினொன்றாம் வீடு ஆகிய இடங்களே. மற்ற இடங்கள் உகந்ததல்ல!

Ketu is a killer, and strips the house where it tenets of life in a way, but can promote it in another way. The way it does both is through it's strong empty feeling. By promoting an emptiness in that house, the person often struggles to refill it. This can result in accumulation and abundance (overflowing fullness: abundance of the heart) for that house,

Ketu in the 7th causes a feeling of loss of connections with others, a natural result of Rahu in the first, which makes one often rejected and abandoned for being out caste. This happens subtly through out life for those bearing the mark of Rahu in the first.

கேதுவும் சந்திரனும் சேர்ந்து 1ல் இருந்தால்: "உடலும் உள்ளமும் நலந்தானா? என்று அடிக்கடி கேட்க வேண்டிய நிலையில் ஜாதகன் இருப்பான்

கேதுவும் சந்திரனும் சேர்ந்து 2ல் இருந்தால்: குடும்ப அமைப்பிற்கு இது உகந்ததல்ல. ஜாதகனின் துணைவிக்கு அல்லது ஜாதகியாக இருந்தால் துணைவனுக்கு நல்லதல்ல!

கேதுவும் சந்திரனும் சேர்ந்து 3ல் இருந்தால்: சகோதர, சகோதரிகள் மூலம் ஜாதகனுக்கு அடிக்கடி மன உளைச்சல்கள் ஏற்படும்

கேதுவும் சந்திரனும் சேர்ந்து 4ல் இருந்தால்: சூழ்நிலையால் ஏமாற்று வேலைகளில் ஜாதகன் ஈடுபட நேரிடும். அதை வைத்துப் பல பிரச்சினைகளைச் சந்திக்கவும் நேரிடும்

கேதுவும் சந்திரனும் சேர்ந்து 5ல் இருந்தால்: சிகரெட், பான் பராக், மது, போதை வஸ்துக்கள் என்று எல்லா தீய பழக்கங்களுக்கும் ஜாதகன் அடிமைப்பட நேரிடும்

கேதுவும் சந்திரனும் சேர்ந்து 6ல் இருந்தால்: இது இருவருக்கும் உகந்த இடம், ஜாதகன் மருத்துவம் அல்லது உடல் சார்ந்த துறைகளில் பணியாற்றி மேன்மை அடைவான்.

கேதுவும் சந்திரனும் சேர்ந்து 7ல் இருந்தால்: ஜாதகன் தகுதி இல்லாத பெண்களின் சகவாசத்தால் கெட்டு அலைய நேரிடும் இந்த அமைப்பு உள்ளவர்கள் பெண்கள் விஷ்யத்தில் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். பெண்களாக இருந்தால், ஆண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம்.

கேதுவும் சந்திரனும் சேர்ந்து 8ல் இருந்தால்: இது உகந்ததல்ல. ஜாதகனின் துணைவிக்கு அல்லது ஜாதகியாக இருந்தால் துணைவனுக்குக் கண்டம் ஏற்படும்!

கேதுவும் சந்திரனும் சேர்ந்து 9ல் இருந்தால்: ஜாதகன் ஆன்மிகம், இறைவழிபாடு என்று சமர்த்தாக இருப்பான். பின்னாட்களில் அவற்றில் பிரபலம் அடையவும் செய்வான்

கேதுவும் சந்திரனும் சேர்ந்து 10ல் இருந்தால்: ஜாதகன் பெரும்பாலும் மருத்துவத்துறையில் பணிபுரிய நேரிடும். அதில் மேன்மையும் அடைவான்.

கேதுவும் சந்திரனும் சேர்ந்து 11ல் இருந்தால்: ஜாதகன் எந்தத் துறையில் பணிபுரிந்தாலும், அத்துறையில் முழுத் திறமை யுடையவனாக, அறிவுஜீவியாக இருப்பான். அதில் தொடர்ந்து பணிபுரிந்து மேன்மையடைவான்

கேதுவும் சந்திரனும் சேர்ந்து 12ல் இருந்தால்: ஜாதகன் பற்று அற்றவனாக இருப்பான். எதிலும் பிடிப்பு இல்லாதவனாக இருப்பான். முழு ஞானியாக இருப்பான்

பற்று இல்லாவிட்டாலே ஞானிதானே சாமிகளா? சொல்லப்பட்டுள்ள அனைத்துமே பொதுப்பலன்கள். ஜாதகத்தில் உள்ள பிற அமைப்புக்களைவைத்து அவைகள் கூடலாம் அல்லது குறையலாம். அல்லது இல்லாமலும் போகலாம்

Admin•••18
avatar
எழுத்ததிகாரன்
30/7/2012, 9:07 pm
கேதுவுடன் சனி சேர்ந்திருப்பதால் ஏற்படக்கூடிய பலன்கள்.

1ல் அதாவது லக்கினத்தில்

லக்கினம் என்பது தோற்றம், உடல் சம்பந்தப்பட்ட இடம். இங்கே இந்த
வில்லன்கள் இருவரும் இருப்பது நல்லதல்ல. உடல் உபாதைகள், உடற்
குறைபாடுகள் ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும். இங்கே கேதுவுடன் சேரும்
சனீஷ்வரன் வக்கிரகதியில் இருந்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும்
The native will suffer with chronic diseases

இரண்டாம் வீட்டில் கேதுவுடன் சனி இருந்தால்:

கையில் காசு தங்காது. எப்போதும் பணப் பிரச்சினை இருக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் பத்தாது. அதற்குமேல் செலவு உண்டாகும். பூர்விக சொத்துக்கள் இருந்தாலும், அத்தனையும் கரைந்துவிடும்.

மூன்றாம் வீட்டில் கேதுவுடன் சனி இருந்தால்:

உடன்பிறப்புக்களால், குறிப்பாக சகோதரர்களால் ஜாதகனுக்கு எந்த நன்மையும் இருக்காது. தொல்லைகள் அதிகமாக இருக்கும். There won't be cordial
relationship!

நான்காம் வீட்டில் இருந்தால்

ஜாதகரின் நடத்தை சரியாக இருக்காது. மெச்சும்படியாக இருக்காது. அவரைச் சூழ்ந்திருப்பவர்களுக்கு, அவரால் நன்மைகள் எதுவும் இருக்காது. மேற்கொண்டு ஜாதகனால், அவனுடைய குடும்பத்தினர்களும், நண்பர்களும் அவதிப்படவே நேரிடும். பெண்ணாக இருந்தாலும் இதே பலன்தான். யாருக்கும் கட்டுப்படாதவளாக இருப்பாள். இந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தால் மட்டுமே அதற்கு விதிவிலக்காகும். அவப்பெயர்களில் இருந்து விடுபடமுடியும்.

ஐந்தாம் வீட்டில் கேதுவுடன் சனி இருந்தால்

ஜாதகனுக்கு இல்லற வாழ்வில் அக்கறை இருக்காது. எதிலும் பிடிப்பு இருக்காது துறவு மனப்பான்மை மேலோங்கியிருக்கும். புராணங்கள், வேதங்களில் அதிக ஈடுபாடு இருக்கும். சிலர் மடங்களில் போய்ச் சேர்ந்து விடுவார்கள்.

ஆறாம் வீட்டில் கேதுவுடன் சனி இருந்தால்

ஜாதகன் ஏமாற்றம், திருட்டு, துரோகம் என்று பலவழிகளிலும் தன் பொருட்களை செல்வத்தைப், பணத்தைப் பறிகொடுக்க நேரிடும். அல்லது இழக்க நேரிடும். சிலருக்கு கடுமையான நோய்கள் ஏற்பட்டு, உடல் செயல் இழந்து போகும். இந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தால், ஜாதகனுக்கு மேற்கூரிய தொல்லைகள் இருக்காது. ஜாதகன் பொதுச் சேவைகளில் ஈடுபடுவான். இந்த அமைப்பு பன்னிரெண்டாம் வீட்டைப் பார்ப்பதால் பலவிதமான விரயங்களும் ஏற்படும்.

ஏழாம் வீட்டில் கேதுவுடன் சனி இருந்தால்

ஜாதகன் அதீதமான உடல் இச்சைகளை உடையவன். பல பெண்களிடம் உறவு கொள்வான். உறவுமுறைகள், வயது முறைகள் எதுவுமின்றி உறவு சொள்வான் சிலர் தங்கள் மனைவியைப் பறிகொடுக்க நேரிடும். இளமையிலேயே வயதான தோற்றம் உண்டாகும். இந்த அமைப்பு லக்கினத்தைப் பார்ப்பதால் அந்த நிலை உண்டாகும்

எட்டாம் வீட்டில் கேதுவுடன் சனி இருந்தால்

இந்த அமைப்பினால், எட்டாம் வீட்டிற்கும் பாதிப்பு, அதே நேரத்தில் இவர்கள் இருவரின் பார்வையினால் இரண்டாம் வீட்டிற்கும் பாதிப்பு. ஜாதகருக்குப் பல தடைகள், செயல்பாடுகளில் அவதிகள் உண்டாகும். குடும்ப வாழ்க்கையிலும் பல பிரச்சினைகள், துன்பங்கள் உண்டாகும். இறுதியில் ஜாதகர் பெரிய ஞானியாகிவிடுவார். அது ஒன்றுதான் நன்மை ஞானம் பெறுவது நன்மைதானே?

ஒன்பதாம் வீட்டில் கேதுவுடன் சனி இருந்தால்:

ஜாதகர் தீவிர இறை நம்பிக்கைகளை உடையவாராகி விடுவார். பல இறைப் பணிகள், மற்றும் அறப்பணிகளை மேற்கொள்வார். பாதி நாட்கள் கோவில் குளம், புனித நதியில் நீராடுதல் என்று ஊர் ஊராகச் சுற்றுவார்.

பத்தாம் வீட்டில் கேதுவுடன் சனி இருந்தால்:

ஜாதகர் தன்னுடைய இறுதிக் காலத்தில் வீட்டை விட்டு வெளியேறித் துறவியாக வாழ்வார். ஆன்மிகத்தில் ஈடுபட்டு, பெரிய பேச்சாளராக அல்லது மத போதகராக அல்லது இறையடியாராகத் தன் வாழ்நாட்களைக் கழிப்பார்.

பதினொன்றாம் வீட்டில் கேதுவுடன் சனி இருந்தால்:

ஜாதகர் துறவு மேற்கொண்டு ஆன்மிகத்தில் ஈடுபடுவார். புகழ் பெறுவார். நாடறிந்த துறவியாக இருப்பார். தனக்குத் தெரிந்த நல்வழிகளைப் பிறருக்குச் சொல்லும் வாழ்க்கையை மேற்கொள்வார்

பன்னிரெண்டாம் வீட்டில் கேதுவுடன் சனி இருந்தால்:

உடல் வியாதிகள், சிறைவாசம், தனித்த வாழ்க்கை என்று ஜாதகனின் வாழ்க்கை மகிழும்படியாக இருக்காது. சுபக்கிரகங்களின் பார்வை இல்லாவிட்டால் இதுவே அரங்கேறும். வயதான காலத்தில் தன் சொந்த ஊரைவிட்டு வெளி இடங்களில் வாசம் செய்ய நேரிடும்

•••19
Sponsored content

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

கிரகங்களுடன் இராகு, கேது சேர பலன்கள்

From எழுத்ததிகாரன்

Topic ID: 78

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...