சென்னை: கூடங்குளம் 3வது மற்றும் 4வது அணு உலைகளை முதல்வர் ஜெயலலிதா எதிர்க்க வேண்டும் என்று போராட்டக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சுப. உதயகுமார் எழுதியுள்ள கடிதம்:
கூடங்குளம் அணுமின் நிலையைப் பிரச்சினை பற்றிய அண்மை நிகழ்வுகள் சிலவற்றை தங்கள் கவனத்துக்குக் கொண்டுவர என்னை தயவு செய்து அனுமதியுங்கள்.
கடந்த மே 14, 2014 அன்று கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நடந்த ‘சிறு' விபத்தில் 6 பேர் காயமடைந்தனர். இருவர் 70 டிகிரி தீப்புண்களுடன் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டுபோகப்பட்டனர். ஒரு மாதமாகியும் அவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. அதுபோல, 2013-ம் ஆண்டு சனவரி மாதம் முதல் மே 17, 2014 வரை கூடங்குளம் அணுமின் நிலைய ஊழியர்களுக்கு 5.2 கோடி ரூபாய்க்கு மருத்துவச் செலவு செய்திருக்கிறார்கள். இதில் பெரும்பான்மையான தொகை கண் சம்பந்தப்பட்டப் பிரச்சினைகளுக்காக செலவு செய்யப்பட்டுள்ளது. கூடங்குளம், இடிந்தகரை பகுதியில் வாழும் பொதுமக்களும் இம்மாதிரியான நோய்களுக்கு ஆளாகியிருக்க வேண்டும், அனால் அம்மக்களுக்கு யாரும் எந்த விதமான உதவியும் இதுவரை செய்யவில்லை. கூடங்குளம் அணுமின் திட்டம் இப்படிப்பட்டப் பிரச்சினைகளோடுத் தொடர்ந்து கொண்டிருந்தாலும், அதை சனநாயக முறையில் அறவழியில் எதிர்த்துப் போராடும் எங்கள் மக்கள் மீதுப் போடப்பட்ட வழக்குகள் அப்படியே இருக்கின்றன.
டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான முந்தைய காங்கிரசு அரசு தேர்தல் நேரத்தில் அவசரம் அவசரமாக தேர்தல் ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்று கூடங்குளம் 3 மற்றும் 4 அணுஉலைகளுக்கு ஒப்பந்தம் போட்டது. இந்த கூடுதல் உலைகளுக்கான பூர்வாங்கப் பணிகள் இப்போது தொடங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.
இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சுப. உதயகுமார் எழுதியுள்ள கடிதம்:
கூடங்குளம் அணுமின் நிலையைப் பிரச்சினை பற்றிய அண்மை நிகழ்வுகள் சிலவற்றை தங்கள் கவனத்துக்குக் கொண்டுவர என்னை தயவு செய்து அனுமதியுங்கள்.
கடந்த மே 14, 2014 அன்று கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நடந்த ‘சிறு' விபத்தில் 6 பேர் காயமடைந்தனர். இருவர் 70 டிகிரி தீப்புண்களுடன் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டுபோகப்பட்டனர். ஒரு மாதமாகியும் அவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. அதுபோல, 2013-ம் ஆண்டு சனவரி மாதம் முதல் மே 17, 2014 வரை கூடங்குளம் அணுமின் நிலைய ஊழியர்களுக்கு 5.2 கோடி ரூபாய்க்கு மருத்துவச் செலவு செய்திருக்கிறார்கள். இதில் பெரும்பான்மையான தொகை கண் சம்பந்தப்பட்டப் பிரச்சினைகளுக்காக செலவு செய்யப்பட்டுள்ளது. கூடங்குளம், இடிந்தகரை பகுதியில் வாழும் பொதுமக்களும் இம்மாதிரியான நோய்களுக்கு ஆளாகியிருக்க வேண்டும், அனால் அம்மக்களுக்கு யாரும் எந்த விதமான உதவியும் இதுவரை செய்யவில்லை. கூடங்குளம் அணுமின் திட்டம் இப்படிப்பட்டப் பிரச்சினைகளோடுத் தொடர்ந்து கொண்டிருந்தாலும், அதை சனநாயக முறையில் அறவழியில் எதிர்த்துப் போராடும் எங்கள் மக்கள் மீதுப் போடப்பட்ட வழக்குகள் அப்படியே இருக்கின்றன.
டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான முந்தைய காங்கிரசு அரசு தேர்தல் நேரத்தில் அவசரம் அவசரமாக தேர்தல் ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்று கூடங்குளம் 3 மற்றும் 4 அணுஉலைகளுக்கு ஒப்பந்தம் போட்டது. இந்த கூடுதல் உலைகளுக்கான பூர்வாங்கப் பணிகள் இப்போது தொடங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.