சென்னை: தங்கள் திருமணத்திற்கு வருபவர்கள் அன்பளிப்போ, மலர் கொத்தோ கொண்டு வந்து தர வேண்டாம் மாறாக எபிலிட்டி பவுன்டேஷனுக்கு அன்பளிப்பு தொகையை காசோலையாகவோ, டிடியாகவோ அளிக்குமாறு நடிகை அமலா பாலும், இயக்குனர் விஜய்யும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
காதலர்களாக வலம் வந்த இயக்குனர் விஜய், நடிகை அமலா பால் ஆகியோரின் திருமணம் வரும் 12ம் தேதி சென்னையில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் ஹாலில் நடைபெறுகிறது. அன்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.
இந்நிலையில் பத்திரிக்கை வைக்கையில் அதனுடன் ஒரு வேண்டுகோள் கடிதத்தையும் சேர்த்து வைத்திருக்கிறார்கள் அமலாவும், விஜய்யும்.
அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது,
எங்கள் திருமணத்துக்கு மலர் கொத்துகளோ, பரிசு பொருட்களோ, அன்பளிப்புகளோ யாரும் வழங்க வேண்டாம். உங்களின் அன்பான வாழ்த்துக்களே போதும். அப்படி நீங்கள் எங்களை கவுரவப்படுத்த விரும்பினால் உங்கள் அன்பளிப்பு தொகையை காசோலையாகவோ, வரைவோலையாகவோ "எபிலிட்டி பவுன்டேஷன்" என்ற அமைப்புக்கு வழங்குங்கள். இந்த அமைப்பு 1995ம் ஆண்டு முதல் சென்னையில் செயல்பட்டு வருகிறது. ஏராளமான மாற்றுத் திறன் குழந்தைகளையும், ஆதரவற்ற குழந்தைகளும் பராமரித்து படிக்க வைத்து வாழ்கைக்கு வழிகாட்டும் அமைப்பாகும். உங்கள் பரிசு அவர்களுக்கு சென்றால் அவர்கள் வாழ்த்து எங்களுக்கு கிடைக்கும். 80சி விதியின்படி உங்கள் பரிசு தொகைக்கு வருமான வரிவிலக்கும் கிடைக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காதலர்களாக வலம் வந்த இயக்குனர் விஜய், நடிகை அமலா பால் ஆகியோரின் திருமணம் வரும் 12ம் தேதி சென்னையில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் ஹாலில் நடைபெறுகிறது. அன்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.
இந்நிலையில் பத்திரிக்கை வைக்கையில் அதனுடன் ஒரு வேண்டுகோள் கடிதத்தையும் சேர்த்து வைத்திருக்கிறார்கள் அமலாவும், விஜய்யும்.
அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது,
எங்கள் திருமணத்துக்கு மலர் கொத்துகளோ, பரிசு பொருட்களோ, அன்பளிப்புகளோ யாரும் வழங்க வேண்டாம். உங்களின் அன்பான வாழ்த்துக்களே போதும். அப்படி நீங்கள் எங்களை கவுரவப்படுத்த விரும்பினால் உங்கள் அன்பளிப்பு தொகையை காசோலையாகவோ, வரைவோலையாகவோ "எபிலிட்டி பவுன்டேஷன்" என்ற அமைப்புக்கு வழங்குங்கள். இந்த அமைப்பு 1995ம் ஆண்டு முதல் சென்னையில் செயல்பட்டு வருகிறது. ஏராளமான மாற்றுத் திறன் குழந்தைகளையும், ஆதரவற்ற குழந்தைகளும் பராமரித்து படிக்க வைத்து வாழ்கைக்கு வழிகாட்டும் அமைப்பாகும். உங்கள் பரிசு அவர்களுக்கு சென்றால் அவர்கள் வாழ்த்து எங்களுக்கு கிடைக்கும். 80சி விதியின்படி உங்கள் பரிசு தொகைக்கு வருமான வரிவிலக்கும் கிடைக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.