சென்னை: மாநிலத்தில் ஏதாவது ஒரு அசம்பாவித சம்பவம் நடந்தால், அதைப் பற்றியும், அந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் பற்றியும், சில தினங்களுக்கு விவாதிப்பது; காலையில் இருந்து இரவு வரை, ஓயாமல் தொடர் கூட்டம் நடத்துவது; சுற்றறிக்கை அனுப்புவது; இறுதியில், "கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரிப்பது என்பதே, அரசு நிர்வாகங்களின் செயல்பாடாக இருந்து வருகிறது. சம்பவம் ஒன்று: கடந்த 2004ம் ஆண்டு, ஜூலை 16ம் தேதி நடந்த கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி தீ விபத்தில், 90 குழந்தைகள் துடி துடித்துச் சாம்பலாகினர். இந்த சம்பவம் நடந்ததும், கூரை, கொட்டகையில் இயங்கி வந்த பள்ளிகள் மீது, கிடுக்கிப்பிடி நடவடிக்கை எடுத்தனர் அதிகாரிகள். ஆனால், மொட்டை மாடிகளில் எல்லாம் தனியார் பள்ளிகள் இயங்க அனுமதி கொடுத்த அதிகாரிகளும், உயர் அதிகாரிகளே அனுமதி கொடுத்ததால் நமக்கேன் வம்பு என, எதிர்ப்பு தெரிவிக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ முடியாமல், மவுன குருவாக இருந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் மீதோ, எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து ஆராய்ந்து, பிற்காலத்தில் இதுபோன்ற எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க, நீதிபதி சம்பத் கமிட்டியை நியமித்து, அப்போதைய அரசு நடவடிக்கை எடுத்தது. நீதிபதி சம்பத்தும், அரசுப் பள்ளிகள் உட்பட எந்தப் பள்ளிகளிலும், கூரைகள், ஓலைகள் வேயப்பட்ட வகுப்பறைகள் இருக்கக் கூடாது என்பது உட்பட, பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய, 600 பக்க அறிக்கையை, அரசுக்கு சமர்ப்பித்தார்.
தொடரும் விதிமீறல்கள்: ஆனால், இப்போதும் தனியார் பள்ளிகளில் பல விதிமீறல்கள் இருக்கத் தான் செய்கின்றன. விளையாட்டு மைதானங்கள் இல்லாமலும், குறுகிய இடங்களிலும், போதிய இட வசதி இல்லாமலும் பல பள்ளிகள் இயங்கத்தான் செய்கின்றன. இந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதில், பழைய பள்ளிகள் என காரணம் காட்டி, இவற்றுக்கு மட்டும் விதிவிலக்கு தரவும், முயற்சிகள் நடந்து வருகிறது.
சம்பவம் இரண்டு: சில ஆண்டுகளுக்கு முன், நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகில், தனியார் பள்ளி வேன் டிரைவர் ஒருவர், அலைபேசியில் பேசிக்கொண்டே வேனை ஓட்டியதில், நிலை தடுமாறி சாலையோர குளத்தில் கவிழ்ந்ததால், ஒரு ஆசிரியை மற்றும் பள்ளி சிறுவர்கள் என, மொத்தம், 16 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். இந்த சம்பவம் நடந்த சில தினங்கள் வரை, வழக்கம்போல், அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம், போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் கண்டிப்பு நடவடிக்கை, பள்ளி வேன்களில் போலீசார் சோதனை, அளவுக்கு அதிகமாக மாணவர்களை ஏற்றிச்சென்ற வேன் டிரைவர்கள் மீது நடவடிக்கை, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டியவர்கள் மீது நடவடிக்கை போன்ற காட்சிகள் அரங்கேறின.
நடவடிக்கை இல்லை: இதுபோல், அவ்வப்போது பல விபத்துகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. ஏற்கனவே நடந்த சம்பவங்கள் தொடர்பாக, தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா, அப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறதா என்பது தான் முக்கியக்
கேள்வி. இவை இரண்டும் இடைவிடாமல் தொடர்ந்து நடந்திருந்தால், குழந்தை சுருதியின் உயிர் பறிபோயிருக்காது. ஏதாவது சம்பவம் நடந்துவிட்டால், கூப்பாடு போடுவது, அதன்பின் சுத்தமாக மறந்துவிடுவது போன்ற போக்கு தொடரும் வரை, இதுபோன்ற துயரங்கள் தொடரத்தான் செய்யும்.
ஒரு முறை கூட்டம் போட்டதோடு சரி: பெயர் வெளியிட விரும்பாத, சென்னையைச் சேர்ந்த, மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் ஒருவர் கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன், செங்கல்பட்டில் ஒரு பள்ளி வேன் விபத்தில் சிக்கியதில், பல குழந்தைகள் இறந்தனர். உடனே, மெட்ரிக் பள்ளி முதல்வர்களை அழைத்து, ஆய்வுக் கூட்டம் நடத்தினர். மாணவரை அழைத்துச் செல்லும் வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் டிரைவர் பெயர், கைப்பேசி எண், அவரது முகவரி, வாகனத்தின் பதிவு எண், முறையாக பராமரிக்கப்பட்டு, போக்குவரத்துத் துறையின் தகுதிச் சான்றிதழ் (எப்.சி.,-பிட்னஸ் சர்ட்டிபிகேட்) பெறப்பட்டிருக்கிறதா என்பது உட்பட, பல்வேறு தகவல்களை பெற்று, பள்ளியில் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டனர். ஆனால், அந்த தகவல்கள், முறையாக பள்ளிகளில் பராமரிக்கப்படுகிறதா என்பதை, அதிகாரிகளும் ஆய்வு செய்வதில்லை. அதைப்பற்றி, பள்ளி நிர்வாகங்களும் கண்டுகொள்வதில்லை. பெற்றோரும், தங்கள் குழந்தை பாதுகாப்பான வாகனத்தில் பள்ளிக்குச் சென்று வருகிறதா என்பதை கண்காணிப்பதில்லை. இப்படி, ஒவ்வொருவரும், தங்களது பொறுப்புகளை சரிவர செய்யாததால் தான், மழலைகளின் மரணங்கள் தொடர்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
தொடரும் விதிமீறல்கள்: ஆனால், இப்போதும் தனியார் பள்ளிகளில் பல விதிமீறல்கள் இருக்கத் தான் செய்கின்றன. விளையாட்டு மைதானங்கள் இல்லாமலும், குறுகிய இடங்களிலும், போதிய இட வசதி இல்லாமலும் பல பள்ளிகள் இயங்கத்தான் செய்கின்றன. இந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதில், பழைய பள்ளிகள் என காரணம் காட்டி, இவற்றுக்கு மட்டும் விதிவிலக்கு தரவும், முயற்சிகள் நடந்து வருகிறது.
சம்பவம் இரண்டு: சில ஆண்டுகளுக்கு முன், நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகில், தனியார் பள்ளி வேன் டிரைவர் ஒருவர், அலைபேசியில் பேசிக்கொண்டே வேனை ஓட்டியதில், நிலை தடுமாறி சாலையோர குளத்தில் கவிழ்ந்ததால், ஒரு ஆசிரியை மற்றும் பள்ளி சிறுவர்கள் என, மொத்தம், 16 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். இந்த சம்பவம் நடந்த சில தினங்கள் வரை, வழக்கம்போல், அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம், போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் கண்டிப்பு நடவடிக்கை, பள்ளி வேன்களில் போலீசார் சோதனை, அளவுக்கு அதிகமாக மாணவர்களை ஏற்றிச்சென்ற வேன் டிரைவர்கள் மீது நடவடிக்கை, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டியவர்கள் மீது நடவடிக்கை போன்ற காட்சிகள் அரங்கேறின.
நடவடிக்கை இல்லை: இதுபோல், அவ்வப்போது பல விபத்துகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. ஏற்கனவே நடந்த சம்பவங்கள் தொடர்பாக, தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா, அப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறதா என்பது தான் முக்கியக்
கேள்வி. இவை இரண்டும் இடைவிடாமல் தொடர்ந்து நடந்திருந்தால், குழந்தை சுருதியின் உயிர் பறிபோயிருக்காது. ஏதாவது சம்பவம் நடந்துவிட்டால், கூப்பாடு போடுவது, அதன்பின் சுத்தமாக மறந்துவிடுவது போன்ற போக்கு தொடரும் வரை, இதுபோன்ற துயரங்கள் தொடரத்தான் செய்யும்.
ஒரு முறை கூட்டம் போட்டதோடு சரி: பெயர் வெளியிட விரும்பாத, சென்னையைச் சேர்ந்த, மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் ஒருவர் கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன், செங்கல்பட்டில் ஒரு பள்ளி வேன் விபத்தில் சிக்கியதில், பல குழந்தைகள் இறந்தனர். உடனே, மெட்ரிக் பள்ளி முதல்வர்களை அழைத்து, ஆய்வுக் கூட்டம் நடத்தினர். மாணவரை அழைத்துச் செல்லும் வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் டிரைவர் பெயர், கைப்பேசி எண், அவரது முகவரி, வாகனத்தின் பதிவு எண், முறையாக பராமரிக்கப்பட்டு, போக்குவரத்துத் துறையின் தகுதிச் சான்றிதழ் (எப்.சி.,-பிட்னஸ் சர்ட்டிபிகேட்) பெறப்பட்டிருக்கிறதா என்பது உட்பட, பல்வேறு தகவல்களை பெற்று, பள்ளியில் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டனர். ஆனால், அந்த தகவல்கள், முறையாக பள்ளிகளில் பராமரிக்கப்படுகிறதா என்பதை, அதிகாரிகளும் ஆய்வு செய்வதில்லை. அதைப்பற்றி, பள்ளி நிர்வாகங்களும் கண்டுகொள்வதில்லை. பெற்றோரும், தங்கள் குழந்தை பாதுகாப்பான வாகனத்தில் பள்ளிக்குச் சென்று வருகிறதா என்பதை கண்காணிப்பதில்லை. இப்படி, ஒவ்வொருவரும், தங்களது பொறுப்புகளை சரிவர செய்யாததால் தான், மழலைகளின் மரணங்கள் தொடர்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.