இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 23 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த 21ஆம் தேதி கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.
23 பேரை பிடித்துச் சென்ற இலங்கை கடற்படையினர், மன்னார் போலீசில் அவர்களை ஒப்படைத்தனர். எல்லை தாண்டிய குற்றச்சாற்றின் பேரில் அனுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்தியது. இதையடுத்து அனுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து வரப்படும் தமிழக மீனவர்கள் இன்று இரவு அல்லது நாளை காலை அவர்கள் ராமேஸ்வரம் திரும்புவார்கள் என்று தெரிகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த 21ஆம் தேதி கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.
23 பேரை பிடித்துச் சென்ற இலங்கை கடற்படையினர், மன்னார் போலீசில் அவர்களை ஒப்படைத்தனர். எல்லை தாண்டிய குற்றச்சாற்றின் பேரில் அனுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்தியது. இதையடுத்து அனுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து வரப்படும் தமிழக மீனவர்கள் இன்று இரவு அல்லது நாளை காலை அவர்கள் ராமேஸ்வரம் திரும்புவார்கள் என்று தெரிகிறது.