Admin•••1
avatar
எழுத்ததிகாரன்
31/8/2012, 4:01 pm
பல காலங்களாக நமது மக்கள் பலர் எதற்கெடுத்தாலும் தன்னம்பிக்கை வேண்டும்... முயற்சி வேண்டும்... தன்னம்பிக்கையோடு எதிர்த்துப் போராட வேண்டும்... என்றெல்லாம் குரல் கொடுக்கிறார்கள். ஆனால் நாம் திறமையோடு முன்னேற நினைத்தால் அதற்கு முட்டுக்கட்டையும் போடுகிறார்கள்! அப்படியானால் தன்னம்பிக்கை என்பதை போராடுவதற்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டுமா? இல்லை முன்னேறுவதற்குப் பயன்படுத்த வேண்டுமா?

ஒரு சிலர், ஒன்று நடந்த பிறகு தான் அதைப் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும் உணர்ந்து கொள்வார்கள். ஆனால் ஒரு தன்னம்பிக்கையாளன் என்பவன் "இதை செய்தால் இதுதான் விளைவு!" என்று சிந்தித்துப் பார்த்து விட்டுதான் அதை செய்யவே தொடங்க வேண்டும். அதற்குப் பெயர்தான் தன்னம்பிக்கை.

ஒன்றை செய்தால் அதில் நான் வெற்றி பெறுவேன். அல்லது இப்படிப் பேசினால் மற்றவர்கள் அதை இவ்வாறு தான் புரிந்து கொள்வார்கள் என்று தெரிந்து செய்வது தான் தன்னம்பிக்கை!

ஒரு செயலை செய்துவிட்டு அதற்கு மற்றவர்களின் பாராட்டை எதிர்பார்த்திருந்தால். அது தன்னம்பிக்கை இல்லை. யாரும் பாராட்டவில்லையே என்று கவலைப்பட்டால் அந்த செயலை செய்ததற்கான தகுதியே நமக்கில்லை என்று தானே பொருள்? ஏனென்றால் தான் செய்யும் செயல் சிறந்ததா? இல்லையா? என்பதைக் கூட அறிந்திருக்கவில்லை என்றால் நாம் எதற்காக அந்தச் செயலை செய்ய வேண்டும்? தன்னம்பிக்கை என்பது மற்றவர்கள் சொல்லித் தெரிந்து கொள்ளும் விஷயம் அல்ல. அது தன்னைப் பற்றித் தானே அறிந்து கொள்ளும் விஷயம்!

தன்னைப்பற்றி தனக்கே தெரியவில்லை என்றால் அவனுக்கு தன்னம்பிக்கை எங்கிருந்து வரும்? நான் இப்படிப் பட்டவன்... எனக்கு இதெல்லாம் முடியும்... இந்த வழிகளில் எல்லாம் எனது திறமையை பயன்படுத்துவேன் அல்லது இந்த வழிகளைக் கொண்டு எனது திறமையை வளர்த்துக் கொள்வேன். இதை இப்படி சாதித்துக் காட்டுவேன் என்று முடிவெடுப்பதுதான் தன்னம்பிக்கை!

சிலர் சொல்வார்கள், தனக்கு திறமை இருக்கிறது என்று மற்றவர்கள்தான் கூற வேண்டுமே தவிர, தானே சொல்லிக் கொள்ளக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால், ஒருவனுடைய பெருமைகளைத்தான் மற்றவர்கள் பேச வேண்டுமே தவிர, அவனுடைய திறமைகளை மற்றவர்கள் பேசக் கூடாது. அப்படிப் பேசவும் முடியாது! ஏனென்றால் மற்றவர்களால் எளிதில் தெரிந்து கொள்ள முடியாததற்குப் பெயர்தான் திறமை. அதுதான் தன்னம்பிக்கை!

ஒருவனுடைய தன்னம்பிக்கையை பிறரால் அறிந்துகொள்ள மட்டுமே முடியும். அப்படி பிறர் ஒன்றை அறிந்துகொள்ள வேண்டுமானால், அங்கே ஒரு செயல் நடைபெற வேண்டும். அந்த செயலை நடத்திக் காட்டுவதுதான் தன்னம்பிக்கை!

மற்றவர்களால் முடியாது என்று சொல்லப்பட்ட ஒன்றை நடத்திக் காட்டுவதுதான் தன்னம்பிக்கை. இதை இவன்தான் செய்தானா? அல்லது இதை இப்படிக்கூட செய்ய முடியுமா? என்ற வியப்பு எப்போது தோன்றுகிறதோ அதுதான் தன்னம்பிக்கை!

"உனக்கு திறமை இருக்கிறது, ஆனால் உனது தலைக்கனம் அதை அழித்து விடும்" என்று ஒருவன் உன்னைப் பார்த்து சொல்கிறான் என்றால், அவன் உனது திறமையைக் கண்டு மிரண்டு போயிருக்கிறான் என்றுதான் பொருள்! எனவே உனக்கு திறமை இருப்பது உண்மையானால் முட்டாள்களிடம் மட்டும் பணிந்து சென்று விடாதே! ஏனென்றால் தன்னம்பிக்கை என்பது முட்டாள்களின் எதிரி! எனவே எந்தக் காரணத்தைக் கொண்டும் முட்டாள்களிடம் மட்டும் பணிந்து சென்று விடாதே!

முட்டாள்களுக்கு தன்னம்பிக்கை என்றாலும் என்னவென்று தெரியாது, தலைக்கணமும் என்னவென்று தெரியாது. அவர்களைப் பொறுத்தவரை திறமைசாலிகளை அடக்க வேண்டும். திறமைசாலிகளோடு அவர்களால் மோதிப்பார்க்க முடியாது. எனவே அமைதிப்படுத்தவே முயற்சிப்பார்கள். அதற்காகவே தற்பெருமை, ஆணவம், வெங்காயம் என்றெல்லாம் பட்டியல் தயாரிப்பார்கள்!

மற்றவர்கள் பாராட்டுவதால் ஒருபோதும் ஒருவனுக்கு தன்னம்பிக்கை வளராது. நீ உனது தன்னம்பிக்கையால் ஒன்றை சாதித்துக் காட்டும் போதுதான் பாராட்டு வெளியில் வரும். எனவே பாராட்டு என்பது தன்னம்பிக்கைக்கு அடிமை! எனவே பாராட்டை கண்டு நீ ஒரு போதும் மயக்கம் கொள்ளாதே!

என்னைப் பொறுத்தவரையில், மற்றவர்களின் புகழ்ச்சிக்கு நான் ஒருபோதும் மயங்கியது இல்லை, ஏனென்றால் நான் ஒன்றை செய்கிறேன் அல்லது சொல்கிறேன் என்றால் அது மற்றவர்களால் விரும்பி ரசிக்கப்படுமா? அல்லது எதிராக விமர்சிக்கப்படுமா? என்று தெரிந்துதான் அதை சொல்வேன். இதை சொன்னால் இதுதான் விளைவு என்று தெரியாமல் நான் எதையும் செய்ததில்லை. தெரிந்தே செய்யும் போது அதன் விளைவுகள் என்னை எந்த விதத்திலும் பாதித்ததும் இல்லை!. அது வெற்றியாக இருந்தாலு சரி, தோல்வியாக இருந்தாலும் சரி.

ஏனென்றால் எதிர்பாராமல் நடக்கும் செயலைக் கண்டுதான் ஒருவன் அதிர்ச்சியும், ஆனந்தமும் அடைவான். ஆனால், இதன் விளைவு இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்து விட்டால், அது நடக்கும் போது நமக்கு எந்த வித சலனமும் இருக்காது. ஆனால் அதைக் கண்டு மற்றவர்கள் சலனம் கொள்வார்கள். அந்த சலனத்தை உண்டாக்குவதற்குப் பெயர்தான் தன்னம்பிக்கை!

ஏனென்றால் தன்னம்பிக்கை என்பது தனக்கு மட்டுமே தெரிந்த ஒரு ஆற்றல். அதை நாம்தான் மற்றவர்களுக்கு உணர வைக்க முடியுமே தவிர. நமக்கு யாரும் உணர்த்த முடியாது! ஒரு தன்னம்பிக்கையாளனின் திறமையை மற்றவர்களால் ரசிக்க மட்டும்தான் முடியும். ஆனால் அவனால் மட்டுமே மற்றவர்களுக்கு உணர்த்த முடியும்! அவனால் மட்டுமே செயல்படுத்த முடியும்!

தன்னம்பிக்கை, முயற்சி, என்றெல்லாம் பேசுபவர்கள், ஒருவன் அந்தத் தன்னம்பிக்கையோடு முயற்சி செய்து ஒரு மருத்துவராக முயன்று பார்க்கட்டும்.... உடனே "போலி மருத்துவர்" என்று கைது செய்ய வருவார்கள். ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரையில் மற்றவர்கள் அங்கீகாரம் கொடுத்தால்தான் ஒருவனுடைய திறமையை நம்புவார்களே தவிர, தானாக உணரும் சக்தி அவர்களுக்குக் கிடையாது.

மேலும், திறமைசாலிக்கு ஆணவம் கூடாது என்று சிலர் சொல்வார்கள். ஆனால் திறமை இல்லாதவனுக்கு ஆணவம் இருக்கலாமா? உதாரணமாக ஒருவன் எதையாவது புதிதாக சொல்லட்டும், யாராவது அதை நம்புவார்களா என்று பாருங்கள்... உடனே ஆதாரம் இருக்கிறதா? நிரூபித்துக் காட்ட முடியுமா? இது எங்கு சொல்லப் பட்டிருக்கிறது? இப்படி அடுக்கடுக்காக கேள்விகள்தான் கேட்பார்கள். அந்த ஆதாரத்தையும் நாம்தான் சொல்ல வேண்டுமே தவிர, அவர்கள் அதை தெரிந்துகொள்ள வேண்டும் என்று முயற்சிக்க மாட்டார்கள். இப்படிப்பட்ட முட்டாள்களுக்கு நீ ஒருபோதும் விளக்கம் கொடுக்காதே!

ஒன்றுமே தெரியாதவர்கள் எல்லாம் உன்னிடம் ஆணவமாக, திமிராக கேள்வி கேட்கும் போது, கொஞ்சமாவது தெரிந்த நீ ஏன் திமிராக நடந்துகொள்ளக் கூடாது? உனது திறமையைப் பார்த்து மற்றவர்களுக்கே உற்சாகம் வந்து விசில் அடித்து, கை தட்டி பாராட்டுகிறார்கள். அப்படியானால் அதை செய்த நீ கொஞ்ச நேரம் குதித்தால்தான் என்ன? ஆனால் விட மாட்டார்கள்! அதை அவர்களால் தங்கிக் கொள்ளவும் முடியாது!

ஏனென்றால் நீ ஆடத் தொடங்கினால் என்னாகும்? இவனெல்லாம் இதை முடியாது என்று சொன்னான், ஆனால் நான் சாதித்துக் காட்டிவிட்டேன் என்று சொல்லி விடுவாய் அல்லவா? அதனால் சிலரின் முட்டாள்தனம் வெளியில் தெரிந்துவிடும் அல்லவா? எனவேதான் உன்னை அமைதிப்படுத்த முயற்சிப்பார்கள்! ஆனால், ஒரு போதும் நீ இதற்கு அனுமதிக்காதே! ஏனென்றால் நான் முன்பே சொன்னது போல தன்னம்பிக்கை என்பது முட்டாள்களின் எதிரி! எனவே நீ தன்னம்பிக்கையாளனாக இருந்தால் ஒரு போதும் முட்டாள்களுக்கு மட்டும் அடங்கி நடந்துவிடாதே!

"இதை நான் செய்வேன்" என்பது தன்னம்பிக்கை என்றால், "இதை நான் செய்தேன்" என்பது மட்டும் எப்படி தலைக்கனமாகும்? எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்று இலக்கணத்தை வகுத்த தொல்காப்பியமே சொல்கிறது, கற்றவர்கள் முன்னிலையிலும், அரசர் சபையிலும் ஒருவன் தனது பெருமைகளை தானே சொல்லிக் கொள்ளலாம். என்று! ஆனால் முட்டாள்கள் மட்டும் அதை சொல்லக்கூடாது என்று சொன்னால் அதை நாம் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்?

அகந்தை என்பது கர்வம். இந்த கர்வம் தான் ஒருவனுக்கு அவமானத்தைத்(அழிவை) தரும். ஆனால் இந்த அகந்தை என்பது "நான்" என்று சொல்வதைக் குறிக்காது. "நான் தான்" என்பதைத் தான் குறிக்கும்! இரண்டும் ஒன்று தானே என்று சிலர் கேட்கலாம், ஆனால் தமிழில் மட்டுமே இந்த நுண்ணிய அறிவு சார்ந்த சொற்கள் அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது.

நான் என்பது "நான் செய்வேன்" என்பதை குறிக்கும். இது தன்னம்பிக்கை! ஆனால் "நான் தான் செய்வேன்" என்று சொன்னால் "என்னால் மட்டுமே முடியும் மற்றவரால் முடியாது" என்று பொருள். இது தான் அகந்தை!

உதாரணமாக நீங்கள் எதையாவது பேசிக் கொண்டிருக்கும் போது, உங்கள் வீட்டில் வயதான பெரியவர்கள் "தான்தோன்றித் தனமாகப் பேசாதே" என்று சொல்லக் கேட்டிருக்கலாம். இந்த வார்த்தையை நுண்ணிய அறிவைக் கொண்டு கவனித்துப் பார்த்தால் ஒரு உண்மை விளங்கும். அதாவது "நான் செய்வேன்" என்ற தன்னம்பிக்கையில் "தான்" என்ற வார்த்தை தோன்றி விட்டால் "நான் தான் செய்வேன்" என்று திரிந்து விடும். எனவே அவ்வாறு பேசினால் இன்னொருவர் அதை செய்து காட்டும்போது, நம்மால் மட்டுமே முடியும் என்று சொன்னது முறியடிக்கப்பட்டு நமக்கு அவமானம் ஏற்படும். எனவே தான்தோன்றித் தனமாகப் பேசாதே! என்று முன்னோர்கள் சொல்லியிருக்கக் கூடும். ஆனால் "இதை நான் செய்தேன்" என்று சொல்லிக் கொள்வது எந்த விதத்திலும் தவறாகாது!

கண்டிப்பா இது நான் எழுதின கட்டுரை தானுங்கோவ்...!!
-எழுத்ததிகாரன்.

Message reputation : 93% (14 votes)

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

தன்னம்பிக்கை என்றால் என்ன?

From எழுத்ததிகாரன்

Topic ID: 451

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...