புதுடில்லி: லஞ்ச ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக, மத்திய அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 34 பேரிடம் விசாரணை நடத்த, சம்பந்தப்பட்ட துறையின் அனுமதி கோரி, மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் (சி.வி.சி.,) கடந்த நான்கு மாதங்களாக காத்திருக்கிறது.
மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் லஞ்ச ஊழல் அதிகரித்து விட்டதாக கிடைத்த தகவலின் பேரில், மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணைய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் கடந்த ஜூன் மாதம் சோதனை நடத்தினர். இதில், அதிகாரிகள் அந்தஸ்தில் பணியாற்றும் மூன்று பேர் லஞ்ச ஊழலில் சிக்கியது கண்டு பிடிக்கப்பட்டது.
அதுபோல், நிதி அமைச்சகத்தை சேர்ந்த நான்கு பேர், பணியாளர் நலம், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறையில் தலா மூன்று பேர், ரயில்வே மற்றும் சுகாதாரத் துறையில் தலா இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவல்லாமல், பாரத ஸ்டேட் வங்கி, தேனா வங்கி, சிண்டிகேட் வங்கி, தொழில் அபிவிருத்தி வங்கி, நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சகம், பி.எஸ்.என்.எல்., அலுவலகங்களில் தலா ஒருவர் என, மொத்தமாக 34 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, லஞ்ச ஊழலில் சிக்கிய நபர்களிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி, சம்பந்தப்பட்ட அரசுத் துறை அதிகாரிகளுக்கு சி.வி.சி., அதிகாரிகள் கடிதம் அனுப்பினர். இதற்கிடையே, லஞ்ச ஊழலில் சிக்கும் நபர்களிடம், சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில், நான்கு மாத காலத்திற்குள் விசாரிக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அனுமதி அளிக்க வேண்டும் என்ற விவரங்கள் கொண்ட நினைவூட்டுக் கடிதத்தையும், சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கு, மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணைய அதிகாரிகள் அனுப்பியுள்ளனர்.
இது குறித்து மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: லஞ்ச ஊழலில் குற்றம்சாட்டபட்ட அரசு ஊழியர்களை விசாரிக்க மூன்று மாத காலத்திற்குள் சம்பந்தப்பட்ட துறையிலிருந்து அனுமதி கிடைக்க வேண்டும். ஒரு வேளை, சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தும் பட்சத்தில், ஒரு மாத காலம் மட்டும் கூடுதலாக வழங்கப்படும். லஞ்ச ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட அரசு அதிகாரிகளின் பெயர், அவர்களது பதவி போன்ற விவரங்கள், கண்காணிப்பு ஆணையத்தின் இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் லஞ்ச ஊழல் அதிகரித்து விட்டதாக கிடைத்த தகவலின் பேரில், மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணைய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் கடந்த ஜூன் மாதம் சோதனை நடத்தினர். இதில், அதிகாரிகள் அந்தஸ்தில் பணியாற்றும் மூன்று பேர் லஞ்ச ஊழலில் சிக்கியது கண்டு பிடிக்கப்பட்டது.
அதுபோல், நிதி அமைச்சகத்தை சேர்ந்த நான்கு பேர், பணியாளர் நலம், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறையில் தலா மூன்று பேர், ரயில்வே மற்றும் சுகாதாரத் துறையில் தலா இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவல்லாமல், பாரத ஸ்டேட் வங்கி, தேனா வங்கி, சிண்டிகேட் வங்கி, தொழில் அபிவிருத்தி வங்கி, நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சகம், பி.எஸ்.என்.எல்., அலுவலகங்களில் தலா ஒருவர் என, மொத்தமாக 34 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, லஞ்ச ஊழலில் சிக்கிய நபர்களிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி, சம்பந்தப்பட்ட அரசுத் துறை அதிகாரிகளுக்கு சி.வி.சி., அதிகாரிகள் கடிதம் அனுப்பினர். இதற்கிடையே, லஞ்ச ஊழலில் சிக்கும் நபர்களிடம், சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில், நான்கு மாத காலத்திற்குள் விசாரிக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அனுமதி அளிக்க வேண்டும் என்ற விவரங்கள் கொண்ட நினைவூட்டுக் கடிதத்தையும், சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கு, மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணைய அதிகாரிகள் அனுப்பியுள்ளனர்.
இது குறித்து மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: லஞ்ச ஊழலில் குற்றம்சாட்டபட்ட அரசு ஊழியர்களை விசாரிக்க மூன்று மாத காலத்திற்குள் சம்பந்தப்பட்ட துறையிலிருந்து அனுமதி கிடைக்க வேண்டும். ஒரு வேளை, சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தும் பட்சத்தில், ஒரு மாத காலம் மட்டும் கூடுதலாக வழங்கப்படும். லஞ்ச ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட அரசு அதிகாரிகளின் பெயர், அவர்களது பதவி போன்ற விவரங்கள், கண்காணிப்பு ஆணையத்தின் இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.