மாலை நேரத்தில்
கோபுரத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தன புறாக்கள்
மழைத்துளிகளில்
மலையினருகே வானவில்லில்
சற்று பிறகு வரும் நிலவொளியில்
மற்றும்
நட்சத்திரங்களில்
உன் ஞாபகங்களை மீட்க முயல்கிறேன்
இரவில்
ஒளிரும் நட்சத்திரங்கள்
என்
வார்த்தைகளை மட்டுமே
உன்னிடம் சேர்க்க மினுங்கிக்கொண்டிருக்கின்றன
என்னிடம் பேசாமலிருப்பவன் நீ
அல்லது
என்னிடம் பேசமுடியாமலிருப்பவன்
முடிந்த இசையின் மௌனம்
காதலைச் சொல்கிறது
புறாக்களின் கூடடையும் சப்தம்
சொல்லத் தூண்டுகிறது
பிரிவின் வேதனையை.
-சக்தி ஜோதி.