கடந்து வந்த பாதையை மறந்து வாழ்கிறார் பிரபல படஅதிபரும், குணச்சித்திர நடிகரும், இயக்குநருமான சித்ரா லட்சுமணன் என்றொரு குற்றச்சாட்டு சமீபகாலமாக கோடம்பாக்கத்தில் துணை-இணை இயக்குநர்கள் மத்தியில் கோலோச்சி வருவதுண்டு. என்ன? ஏதென்று...? விசாரணையில் இறங்கினோம்...
விசாரித்த வகையில் சித்ரா லட்சுமணன் மீதான குற்றச்சாட்டு உண்மைதான் எனப்பட்டது. அதாகப்பட்டது மீண்டும் பெரிய அளவில் படத்தயாரிப்பில் இறங்க திட்டமிட்டு இருக்கும் ராஜ் தொலைக்காட்சி நிறுவனம், நல்ல கதைகளை கேட்டு தேர்வு செய்ய, சீனியர் சித்ரா லட்சுமணனை நியமித்து அவருக்கென தனி அலுவலகம், வாகன வசதி, இத்யாதி, இத்யாதி... சலுகைகளை செய்து கொடுத்திருக்கிறது. ஆனால், மனிதர் கதை சொல்ல வரும் நூற்றுக்கணக்கான துணை இணை இயக்குநர்களிடம் கதையை சொல்ல சொல்லிவிட்டு காது குடைவதும், கைப்பேசியில் யார் யாரிடமோ... கடலை (இந்த வயதிலுமா...?) போடுவதுமாக கவனத்தை கதை மீது வைக்காமல் ஆர்வத்துடன் வந்து கதை சொல்லும் நாளைய இயக்குநர்களை கடுப்பேற்றி வந்திருக்கிறார். இதில் கடுப்பான இளம் இயக்குநர்கள் தான் சித்ராலட்சுமணன் மீது சினங்கொண்டு கோலிவுட்டில் குற்றச்சாட்டு சொல்லி வருகிறார்களாம். பாவம்!
இந்த செய்திக்குபிறகாவது திருந்துவாரா...? சித்ரா. வந்த வழி, வளர்ந்த வழி எண்ணி வருந்துவாரா...?! பார்ப்போம்!!
விசாரித்த வகையில் சித்ரா லட்சுமணன் மீதான குற்றச்சாட்டு உண்மைதான் எனப்பட்டது. அதாகப்பட்டது மீண்டும் பெரிய அளவில் படத்தயாரிப்பில் இறங்க திட்டமிட்டு இருக்கும் ராஜ் தொலைக்காட்சி நிறுவனம், நல்ல கதைகளை கேட்டு தேர்வு செய்ய, சீனியர் சித்ரா லட்சுமணனை நியமித்து அவருக்கென தனி அலுவலகம், வாகன வசதி, இத்யாதி, இத்யாதி... சலுகைகளை செய்து கொடுத்திருக்கிறது. ஆனால், மனிதர் கதை சொல்ல வரும் நூற்றுக்கணக்கான துணை இணை இயக்குநர்களிடம் கதையை சொல்ல சொல்லிவிட்டு காது குடைவதும், கைப்பேசியில் யார் யாரிடமோ... கடலை (இந்த வயதிலுமா...?) போடுவதுமாக கவனத்தை கதை மீது வைக்காமல் ஆர்வத்துடன் வந்து கதை சொல்லும் நாளைய இயக்குநர்களை கடுப்பேற்றி வந்திருக்கிறார். இதில் கடுப்பான இளம் இயக்குநர்கள் தான் சித்ராலட்சுமணன் மீது சினங்கொண்டு கோலிவுட்டில் குற்றச்சாட்டு சொல்லி வருகிறார்களாம். பாவம்!
இந்த செய்திக்குபிறகாவது திருந்துவாரா...? சித்ரா. வந்த வழி, வளர்ந்த வழி எண்ணி வருந்துவாரா...?! பார்ப்போம்!!