மல்லுவுட்டில் ரசிகர்களால் மட்டுமல்ல பொதுமக்களாலும் சேச்சி சேச்சி என்று அன்பாக அழைக்கப்பட்டவர் ஊர்வசி. மலையாள நடிகைகளில் அதிக படங்களில் நடித்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகளுக்கு பிறகு ஊர்வசி, கல்பனா சகோதரிகள்தான் அதிகம் பேசப்பட்டார்கள். ஆனால் இப்போது சகோதரிகளின் நடத்தையால் அவர்களின் இமேஜ் கணிசமான அளவுக்கு சரிந்து விட்டது. கல்பனா திருமணமாகி 13 வருடத்துக்கு பிறகு கணவன் வேண்டாம் என்று கோர்ட் படி ஏறி இருக்கிறார்.
ஊர்வசி மனோஜ் கே.ஜெயனிடமிருந்து விவாகரத்தே வாங்கி விட்டார். இதுகூட பரவாயில்லை. அக்காவும், தங்கையும் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டார்கள் என்ற அரசல் புரசலாக இருந்த தகவல் சமீபத்தில் அவர் கோர்ட்டுக்கு குடித்து விட்டு வந்தாகவும், அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டதாகவும் மனோஜ் கே.ஜெயன் வெளிப்படையாக சொல்ல, ஊர்வசி சகோதரிகளின் மொத்த இமேஜும் சரிந்து விட்டது.
முன்பு அவர் எங்கு படப்பிடிப்புக்கு சென்றாலும் சேச்சி சேச்சி என்று செல்லமாக அழைத்து ஆட்டோகிராப் வாங்கும் கூட்டம் இப்போது குறைந்து விட்டது. அவர் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டால். குடித்துவிட்டு வந்திருப்பாரோ என்ற சந்தேகத்துடனேயே பார்க்கிறார்களாம். நிலைமை இப்படி இருக்க தமிழில் இவர் நடித்த பேச்சியக்கா மருமகன் படம் வெளிவர இருக்கிறது. இதில் கண்ணியமும், மரியாதையும் மிக்க மாமியார் வேடம். ஊர்வசியின் தற்போதைய இமேஜ் படத்தை பாதிக்குமோ என்று தயாரிப்பாளர் கலக்கத்துடன் இருக்கிறார்.
ஊர்வசி மனோஜ் கே.ஜெயனிடமிருந்து விவாகரத்தே வாங்கி விட்டார். இதுகூட பரவாயில்லை. அக்காவும், தங்கையும் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டார்கள் என்ற அரசல் புரசலாக இருந்த தகவல் சமீபத்தில் அவர் கோர்ட்டுக்கு குடித்து விட்டு வந்தாகவும், அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டதாகவும் மனோஜ் கே.ஜெயன் வெளிப்படையாக சொல்ல, ஊர்வசி சகோதரிகளின் மொத்த இமேஜும் சரிந்து விட்டது.
முன்பு அவர் எங்கு படப்பிடிப்புக்கு சென்றாலும் சேச்சி சேச்சி என்று செல்லமாக அழைத்து ஆட்டோகிராப் வாங்கும் கூட்டம் இப்போது குறைந்து விட்டது. அவர் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டால். குடித்துவிட்டு வந்திருப்பாரோ என்ற சந்தேகத்துடனேயே பார்க்கிறார்களாம். நிலைமை இப்படி இருக்க தமிழில் இவர் நடித்த பேச்சியக்கா மருமகன் படம் வெளிவர இருக்கிறது. இதில் கண்ணியமும், மரியாதையும் மிக்க மாமியார் வேடம். ஊர்வசியின் தற்போதைய இமேஜ் படத்தை பாதிக்குமோ என்று தயாரிப்பாளர் கலக்கத்துடன் இருக்கிறார்.