உப்புமா படங்களில் நடித்துக் கொண்டிருந்த அமலா பாலுக்கு மைனாவுக்கு பிறகு அடித்தது பம்பர் பரிசு. அடுத்த படமே விக்ரமுடன், ஆரியாவுடன் என்று மளமளவென உயர்ந்தார். தமிழில் ஒரு நடிகை பாப்புலராகிவிட்டால் தெலுங்கு ஹீரோக்களுக்கு மூக்கு வியர்த்துவிடும் அள்ளிக்கொண்டு போய் ஆட்டம் போட்டு விடுவார்கள். அப்படித்தான் அமலாபாலையும் அள்ளிக் கொண்டு போனார்கள். அங்கேயும் ஆடித்தீர்த்தார் அமலாபால். அதன்பிறகு என்னாச்சு என்றே தெரியவில்லை. கண்மூடி திறந்து பார்த்தால் கையில் படமே இல்லை. பார்ட்டிக்கும், பங்கஷனில் ஆடவும் கூப்பிட்டார்களே தவிர படத்தில் நடிக்க யாரும் கூப்பிடவில்லை.
இந்த நேரத்தில் தன் சொந்த ஊர் பக்கம் ஒதுங்கினார். எந்த ஹீரோவுடன் நடித்தாலும் அந்த ஹீரோவுடன் நெருக்கமாக நட்பு பாராட்டும் தனது பார்முலாவை அங்கேயும் செயல்படுத்தினார் ஒர்க்அவுட் ஆகிவிட்டது. மாலேட்டனும், மம்முக்காவும் இப்போது அமலாவின் நண்பர்கள். சொந்த மண்ணில் நடிகைகளை ஒரம்கட்டிவிட்டு நம்பர் ஒண் இடத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார். அமலா வழி ஆச்சர்யவழிதான்.
இந்த நேரத்தில் தன் சொந்த ஊர் பக்கம் ஒதுங்கினார். எந்த ஹீரோவுடன் நடித்தாலும் அந்த ஹீரோவுடன் நெருக்கமாக நட்பு பாராட்டும் தனது பார்முலாவை அங்கேயும் செயல்படுத்தினார் ஒர்க்அவுட் ஆகிவிட்டது. மாலேட்டனும், மம்முக்காவும் இப்போது அமலாவின் நண்பர்கள். சொந்த மண்ணில் நடிகைகளை ஒரம்கட்டிவிட்டு நம்பர் ஒண் இடத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார். அமலா வழி ஆச்சர்யவழிதான்.