தமிழக உணவு கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு, பெண் போலீஸ் வழங்கப்படாததால், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் பெண்களை, கைது செய்ய முடியாமல், போலீசார் தவித்து வருகின்றனர்.
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில், தமிழக போலீசில், உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு (புட் செல்) செயல்பட்டு வருகிறது. இதில், ஐ.ஜி., தலைமையில், டி.ஐ.ஜி., அதை தொடர்ந்து சென்னை, மதுரை, கோவை, திருச்சி மண்டல எஸ்.பி.,க்கள் செயல்படுகின்றனர்.
இவர்களுக்கு கீழ், நான்கு டி.எஸ்.பி.,க்கள், 18 இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், எஸ்.எஸ். ஐ.,க்கள், போலீசார் இந்த பிரிவில் பணி புரிகின்றனர். இதில், 18 இன்ஸ்பெக்டர்கள், மாவட்ட பரப்பின் அடிப்படையில், ஒவ்வொரு இன்ஸ்பெக்டரும், இரண்டு முதல் மூன்று மாவட்டங்களை, தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். பெண் போலீசார் இந்த பிரிவுக்கு வழங்கப்பட வில்லை. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் கடத்தல் பெண்கள், துணிகரமாக ரேஷன் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்காரணமாக, தற்போது ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் பெண்களை, உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்யாமல் தவிர்த்து விடுகின்றனர்.
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில், தமிழக போலீசில், உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு (புட் செல்) செயல்பட்டு வருகிறது. இதில், ஐ.ஜி., தலைமையில், டி.ஐ.ஜி., அதை தொடர்ந்து சென்னை, மதுரை, கோவை, திருச்சி மண்டல எஸ்.பி.,க்கள் செயல்படுகின்றனர்.
இவர்களுக்கு கீழ், நான்கு டி.எஸ்.பி.,க்கள், 18 இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், எஸ்.எஸ். ஐ.,க்கள், போலீசார் இந்த பிரிவில் பணி புரிகின்றனர். இதில், 18 இன்ஸ்பெக்டர்கள், மாவட்ட பரப்பின் அடிப்படையில், ஒவ்வொரு இன்ஸ்பெக்டரும், இரண்டு முதல் மூன்று மாவட்டங்களை, தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். பெண் போலீசார் இந்த பிரிவுக்கு வழங்கப்பட வில்லை. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் கடத்தல் பெண்கள், துணிகரமாக ரேஷன் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்காரணமாக, தற்போது ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் பெண்களை, உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்யாமல் தவிர்த்து விடுகின்றனர்.