சென்னை: முழுக்க முழுக்கப் புதுமுகங்களை மட்டுமே வைத்து மணிரத்னம் எடுத்துக் கொண்டிருக்கும் கடல் படத்துக்கு ரூ 50 கோடி பட்ஜெட் என்ற தகவலை வெளியிட்டுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன்.
நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம், நடிகை ராதா மகள் துளசி ஜோடியாக அறிமுகமாகிறார்கள் இந்தப் படத்தில். இவர்களைத் தவிர, அர்ஜுனும் நடிக்கிறார். படத்தின் உண்மையான ஹீரோவாக ஏ ஆர் ரஹ்மான் இருப்பார் என்று நம்பப்படுகிறது.
இந்த நிலையில் படம் குறித்தப் பேசியுள்ள, அப்படத்தின் கதை வசனகர்த்தா எழுத்தாளர் ஜெயமோகன், "நானும் மணிரத்னமும் சேர்ந்து பணியாற்ற கடந்த நபல வருடங்களாகப் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அமையவில்லை. கடலில் அது கைகூடியுள்ளது. கடல் படம் ரூ 50 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த அளவு பட்ஜெட் போட்டிருப்பதால், நினைத்ததை எடுக்கும் சுதந்திரம் கிடைத்திருக்கிறது," என்றார்.
முற்றிலும் புதுமுகங்கள், ஓபனிங் வேறு இருக்காது...ரூ 50 கோடி என்பது அதிகமாகப் படவில்லையா என்றால், "புதுமுகங்களைப் பார்க்காதீர்கள்... இது மணிரத்னம் படம். அது போதாதா?" என்றார்.
நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம், நடிகை ராதா மகள் துளசி ஜோடியாக அறிமுகமாகிறார்கள் இந்தப் படத்தில். இவர்களைத் தவிர, அர்ஜுனும் நடிக்கிறார். படத்தின் உண்மையான ஹீரோவாக ஏ ஆர் ரஹ்மான் இருப்பார் என்று நம்பப்படுகிறது.
இந்த நிலையில் படம் குறித்தப் பேசியுள்ள, அப்படத்தின் கதை வசனகர்த்தா எழுத்தாளர் ஜெயமோகன், "நானும் மணிரத்னமும் சேர்ந்து பணியாற்ற கடந்த நபல வருடங்களாகப் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அமையவில்லை. கடலில் அது கைகூடியுள்ளது. கடல் படம் ரூ 50 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த அளவு பட்ஜெட் போட்டிருப்பதால், நினைத்ததை எடுக்கும் சுதந்திரம் கிடைத்திருக்கிறது," என்றார்.
முற்றிலும் புதுமுகங்கள், ஓபனிங் வேறு இருக்காது...ரூ 50 கோடி என்பது அதிகமாகப் படவில்லையா என்றால், "புதுமுகங்களைப் பார்க்காதீர்கள்... இது மணிரத்னம் படம். அது போதாதா?" என்றார்.